சினிமாவை விட்டு விலகியதற்கு இது தான் காரணம் என்று நடிகை அஞ்சு அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் 80, 90 காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக இருந்தவர் பேபி அஞ்சு. இவர் இரண்டு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகிற்குள் நுழைந்தார். பின் 1979 ஆம் ஆண்டில் வெளிவந்திருந்த ‘உதிரி பூக்கள்’ என்ற படத்தின் மூலம் தான் இவர் நடிகை ஆனார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். பின் கதாநாயகியாகவும் இவர் சில படங்களில் நடித்து இருந்தார்.
மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழியில் பிற மொழி படங்களிலும் நடித்திருந்தார். ஆனால், இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இதனிடையே நடிகை பேபி அஞ்சு அவர்கள் கன்னட நடிகர், டைகர் பிரபாகரரை காதலித்து திருமணம் செய்து இருந்தார். ஆனால், இருவரும் ஒரே வருடத்தில் விவாகரத்து செய்து பிரிந்தார்கள். இவர்களுக்கு அர்ஜுன் என்ற மகன் இருக்கிறார். சிறிய இடைவெளிக்கு பின் அஞ்சு அவர்கள் தொலைக்காட்சி தொடர்களிலும், படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் பேபி அஞ்சு, டைகர் பிரபாகரன் வயதில் என்னை விட மிகப்பெரியவர்.
பேபி அஞ்சு அளித்த பேட்டி:
சொல்லப்போனால், என்னுடைய அப்பாவை விட அவர் பெரியவர் என்று சொல்லலாம். இதனால் தான் பலரும் என்னை திட்டி இருந்தார்கள், என் மீது கோபப்பட்டார்கள். நான் தமிழில் நடித்துக் கொண்டிருக்கும் போது கன்னடத்தில் அவர் பிரபலமான நடிகராக இருந்தார். அப்போது அவருடைய படத்தில் நடிக்கும் போது அவரைப் பற்றி பயங்கரமாக புகழ்ந்து தள்ளுவார்கள். அப்போது எனக்கு வெறும் 17 வயது தான். எப்படியோ நான் அவருடைய காதல் வலையில் சிக்கி விட்டேன். அது திருமணம் என்று சொல்ல முடியாது. ஒரு ஒன்றரை வருடம் மட்டும் நான் அவருடன் இருந்தேன். அவ்வளவு தான் அவருக்கு ஒரு மகள் இருந்தது எனக்கு தெரியும்.
பேபி அஞ்சு – பிரபாகரன் திருமணம்:
பின் திருமணம் செய்து கொண்டு அவருடைய வீட்டிற்கு போனால் அங்கே என் வயதை விட அதிகமான வயதில் இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள். என் வயதில் படித்துக் கொண்டிருந்தார்கள். எனக்கு அப்போது என்ன சொல்லுவது? எப்படி ரியாக்ட் செய்வது என்று கூட தெரியவில்லை. இது குறித்து பிரபாகரனிடம் கேட்டால், ஆமாம் அவர்கள் என் பிள்ளைகள் என்று சொன்னார். அப்பயே நான் மனமுடைந்து போய் விட்டேன். அப்போதுதான் நான் அவருக்கு நான்காவது மனைவி என்று தெரிந்தது. அப்போது நான் நான்கு மாதம் கர்ப்பமாக இருந்தேன். படத்தில் நடிக்கும் ஒரு பெண்ணுடன் அவருக்கு தொடர்பு இருந்தது தெரிய வந்தது.
திருமணம் வாழ்க்கை குறித்து சொன்னது:
இதனால் இருவருக்கும் சின்ன சின்ன வாக்குவாதங்கள் சென்று ஒரு கட்டத்தில் மிகப்பெரிய சண்டை வெடித்து நான் வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்கு வந்து விட்டேன். அப்போது என் மகன் அர்ஜுன் 3 மாத குழந்தை. பின் இரண்டு வருடங்கள் கழித்து பிரபாகரன் இறந்த தகவல் வந்தது. அதற்கு கூட நான் செல்லவில்லை. அந்த அளவிற்கு நான் மன வேதனையில் இருந்தேன். ஒருவேளை அப்போது எனக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்திருந்தால் நான் திருமணம் செய்திருக்கவே மாட்டேன். எனக்கு சினிமாவின் மீது ஆர்வமே பெரிதாக இல்லை. இதனால் சினிமாவை விட்டு விலகலாம் என்றெல்லாம் நினைத்திருந்தேன். காரணம், பல படங்களில் நான் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது துணை கதாபாத்திரங்களில் நடிக்க கேட்டார்கள். அது எனக்கு வருத்தமாக இருந்தது. ஆனால், எனக்கு மலையாளத்தில் நல்ல வாய்ப்புகள் வந்தது. மலையாள மொழியில் என்னுடைய நடிப்பை தான் பார்த்தார்கள், உடலமைப்பை பார்க்கவில்லை.
சினிமா விட்டு விலக காரணம்:
தமிழில், நான் குண்டாக இருக்கிறேன் என்று சொல்லி என்னை ரிஜெக்ட் செய்தார்கள். இப்படி அவர்கள் செய்தது எனக்கு ஒரு விதமான அழுத்தத்தை கொடுத்திருந்தது. குழந்தை நட்சத்திரத்தில் இருந்து நான் நடித்துக் கொண்டிருக்கிறேன். இருந்தும் சரியாக வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் தான் குடும்பத்தில் செட்டில் ஆகலாம் என்று டைகர் பிரபாகரனை திருமணம் செய்து கொண்டேன். நான் சின்ன வயதில் இருந்தே கொஞ்சம் குண்டாக தான் இருப்பேன். இது மரபு ரீதியான பிரச்சனை. எவ்வளவு டயட் இருந்தாலுமே என்னுடைய உடல் எடை ஏறிவிடும். அதே சமயம் எனக்கு ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்வதெல்லாம் பிடிக்காது. அந்த சமயத்தில் தான் நடிகை குஷ்பு, மீனா எல்லாம் குண்டாக இருந்தார்கள். அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்திருந்தது. ஆனால், எனக்கு தரவில்லை என்ற வருத்தத்துடன் கூறியிருந்தார்.