விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் விஜய் ஆண்டனி, விமல் பட நடிகை

0
163
- Advertisement -

விஜய் ஆண்டனி பட நடிகை விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்பவர் விஜய் ஆண்டனி. இவர் நடிகர் மட்டும் இல்லாமல் இசையமைப்பாளர், பாடகரும் ஆவார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

அந்த வகையில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த படங்களில் ஒன்று தான் சைத்தான். இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு சைத்தான் படம் வெளியாகி இருந்தது. இந்த படத்தை பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்திருந்தார். இந்த படத்தில் அருந்ததி நாயர், ஒய் ஜி மகேந்திரன், மீரா கிருஷ்ணன், கிட்டி, சாருஹாசன் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது.

- Advertisement -

அருந்ததி நாயர் குறித்த தகவல்:

மேலும், இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்திருந்தவர் அருந்ததி நாயர். இவர் ஏற்கனவே இதற்கு முன்பே 2014 ஆம் ஆண்டு வெளியான பொங்கி எழு மனோகரா என்ற படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமாகியிருந்தார். அதற்கு பின்பு ஒரு சில படங்களில் நடித்தார். இவர் கடைசியாக தமிழில் நடித்திருந்த படம் ஆயிரம் பொற்காசுகள். அதற்குப் பிறகு இவருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் தமிழில் கிடைக்கவில்லை.

விபத்தில் சிக்கிய அருந்ததி நாயர்:

இந்த நிலையில் நடிகை அருந்ததி நாயர் விபத்தில் சிக்கி இருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, நடிகை அருந்ததி நாயர் அவர்கள் தன்னுடைய சகோதரர் உடன் சேர்ந்து கோவளம் அருகே பைக்கில் சென்றிருக்கிறார். அப்போது யூடுயூப் சேனலுக்கு பேட்டி அளித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது வேகமாக வந்த ஒரு வாகனம் இவர்கள் பைக் மீது மோதி இருக்கிறது.

-விளம்பரம்-

தீவிர சிகிச்சையில் அருந்ததி நாயர்:

பின் இந்த விபத்து நடந்த ஒரு மணி நேரத்திற்கு பிறகு தான் அருந்ததியும் அவருடைய சகோதரரும் சாலையில் விழுந்து கிடப்பது தெரிய வந்திருக்கிறது. இதனை அடுத்து இவர்களை அருகில் இருந்தவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதித்து இருக்கிறார்கள். தற்போது அருந்ததிக்கு வென்டிலேட்டரில் சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் நடிகை அருந்ததி நாயருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது.

அருந்ததி நாயர் நிலைமை:

அதோட அவருடைய நிலைமை ரொம்ப மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.
மேலும், நடிகை அருந்ததி நாயரின் சிகிச்சைக்கு அதிகளவு பணம் தேவைப்படுவதாக அவருடைய தோழி ஒருவர் சோசியல் மீடியாவில் தகவல் பதிவிட்டிருக்கிறார். தற்போது இவருடைய விபத்து குறித்த செய்தி தான் சோசியல் மீடியாவில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. பிரபலங்கள் யாராவது இவருக்கு உதவி செய்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement