‘குடித்துவிட்டு அடாவடி’ – பிரபல நடிகை பாபிலோனா தம்பியை தேடிப்பிடித்து கைது செய்த போலீஸ் – பின்னனி இதோ.

0
1304
babilona
- Advertisement -

குடித்துவிட்டு ஆபாசமாக பேசிய நடிகையின் தம்பியை போலீசார் கைது செய்திருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மாயா. இவர் அசத்தல், வட்டாரம், என் புருஷன் குழந்தை மாதிரி போன்ற படங்களில் குழந்தை வேடத்தில் நடித்த பாபிலோனாவின் அம்மா ஆவார். தமிழ் சினிமா உலகில் கவர்ச்சி நாயகியாக பாபிலோனா திகழ்ந்து இருந்தார்.

-விளம்பரம்-
Babilona

இவர் தன்னுடைய குடும்பத்துடன் சென்னை விருகம்பாக்கம் பகுதியில் வசித்து வருகிறார். மாயாவின் மகன் மற்றும் பாபிலோனாவின் தம்பி தான் விக்கி என்ற விக்னேஷ்குமார். இவர் சென்னை சாலிகிராமம் தசரதபுரத்தில் உள்ள அவரது பாட்டியின் வீட்டில் வசித்து வருகிறார். போதைக்கு அடிமையான இவர் சில ஆண்டுகளாக எந்த வேலைக்கும் செல்லாமல் போதைக்காக காசு கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்து இருக்கிறார்.

- Advertisement -

விக்கியை தாக்கிய மர்ம நபர்கள்:

அதோடு இவர் பல பிரச்சனைகளில் சிக்கி கைதும் ஆகி இருக்கிறார். கடந்த ஆண்டு கூட விக்கியின் வீட்டிற்குள் திடீரென மர்ம நபர்கள் புகுந்து விக்கியை சராமாரியாக கத்தியால் தாக்கியதில் விக்கி பலத்த காயமடைந்தார். இந்த தாக்குதலில் விக்கி முதுகு, வயிறு, மார்பு பகுதிகளில் எல்லாம் பலத்த மற்றும் லேசான காயம் ஏற்பட்டது. பின் விக்கியை உடனடியாக அக்கம் பக்கத்தினர் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து இருந்தார்கள்.

விக்கி செய்த செயல்:

இதற்கு காரணம், விக்கி போதையில் அடிக்கடி அந்த பகுதியில் உள்ளவர்களிடம் தகராறில் ஈடுபட்டு இருக்கிறார். அதனால் தான் அந்த பகுதி மக்கள் விக்கியை தாக்கி இருக்கிறார்கள். அதோடு சமீபத்தில் கூட விக்கி போதையில் காவல்துறை அதிகாரி ஒருவரின் கன்னத்தில் அறைந்தார். இதனால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் நடிகை பாபிலோனாவின் தம்பி ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் சோசியல் மீடியாவில் வைரலாகி விடுகிறது.

-விளம்பரம்-

விக்கி மீது பதியப்பட்ட வழக்கு:

அதாவது, பாபிலோனாவின் தம்பி விக்னேஷ் வீட்டின் அருகே உள்ள கடையில் இருப்பவரை அடித்து 1500 ரூபாய் பணத்தை பறித்து இருக்கிறார். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் அளித்திருந்தார்கள். அது மட்டும் இல்லாமல் விருகம்பாக்கம் காவல் நிலையத்திலும் மது போதையில் வந்து விக்னேஷ் பிரச்சனை செய்திருக்கிறார். இப்படி பல காரணத்தினால் விக்னேஷ் மீது கொலை மிரட்டல், ஆபாச பேசுதல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்திருந்தார்கள்.

கைதான விக்கி:

இதனை எடுத்து போலீசார் விக்னேஷை தீவிரமாக தேடி கைது செய்து இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் இவர் மீது ஏற்கனவே விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி, அடிதடி போன்ற பல்வேறு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. கைது செய்யப்பட்ட விக்னேஷ் இடமிருந்து ஒரு பட்டாக்கத்தியும், காரையும் போலீசார் பரிந்துரை செய்திருக்கின்றனர். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Advertisement