தமிழ் படங்களில் நடிக்காததற்கான காரணம் குறித்து நடிகை பாவனா அளித்திற்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் பாவனா. இவர் தமிழில் ‘சித்திரம் பேசுதடி’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். அதன் பின்னர் இவர் பல படங்களில் நடித்து உள்ளார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து உள்ளார்.
இதனிடையே கடந்த 2017 ஆம் ஆண்டு மலையாள நடிகர் திலீப் அவர்கள் கூலிப் படையை விட்டு ஏவி பாவனாவை கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சமூக ஊடகத்தில் பெரும் சர்ச்சை வெடித்தது. இது அனைவருக்கும் தெரிந்த அன்று. இந்த பிரச்சனை காரணமாக பிரபல மலையாள நடிகர் திலீப் அவர்களை கைது செய்து 85 நாள்கள் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கு 6 வருடமாக நடந்து கொண்டு இருக்கிறது. அதன் பின்னர் தான் பாவனா அவர்கள் தனது நீண்ட நாள் காதலன் நவீனை திருமணம் செய்து கொண்டார்.
பாவனா குறித்த தகவல்:
திருமணத்திற்கு பிறகு நடிகை பாவனா அவர்கள் சினிமாவிலிருந்து கொஞ்சம் பிரேக் எடுத்துக் கொண்டு இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் மீண்டும் ரிஎன்ட்ரி கொடுத்துஇருந்தார் . தமிழில் விஜய் சேதுபதி– திரிஷா நடிப்பில் வெளியான “96” படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை கன்னட மொழியில் ரீமேக் செய்து இருந்தார்கள். இந்த படத்தில் நடிகை பாவனா அவர்கள் திரிஷா கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அதை தொடர்ந்து இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழி படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.
பாவனா பேட்டி:
தமிழில் இவருடைய நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை. கடைசியாக இவர் தமிழில் அசல் படத்தில் தான் நடித்திருந்தார். தற்போது இவர் தி டோர் என்ற தமிழ் படத்தில் நடித்திருக்கிறார். 16 வருடங்களுக்குப் பிறகு இவர் மீண்டும் தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுக்க இருக்கிறார். இது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. இந்நிலையில் தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் பாவனா, நான் தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். இருந்தாலும், தமிழில் எனக்கு பட வாய்ப்புகள் வரவில்லை.
தமிழ் படத்தில் நடிக்காத காரணம்:
அது ஏன் என்றும் எனக்கு தெரியவில்லை? முன்பெல்லாம் படம் பண்ணுவதற்கு எனக்கு எந்த கைடன்சும் இல்லை. அதனால் என்னை தொடர்பு கொள்ள சரியான வாய்ப்புகள் கிடைத்திருக்காது. அசல் படத்திற்கு பிறகு தமிழில் இவ்வளவு பெரிய பிரேக் வரும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. நான் அந்த நேரத்தில் என்னுடைய கேரியர் பத்தி பெருசாக யோசிக்கவும் இல்லை. இப்ப எனக்கு இருக்கற தெளிவு அந்த சமயத்தில் இல்லை. சூட்டிங் போறது எல்லாம் ஒரு வெக்கேஷன் மாதிரிதான் இருந்தது. நான் அங்கு விளையாடிட்டு தான் இருப்பேன்.
வாய்ப்புகள் பற்றி சொன்னது:
அசல்தான் தமிழில் என்னோட கடைசி படமாக இருக்கும் என்று நான் நினைத்தே பார்க்கவில்லை. நல்ல படம் வந்தால் பண்ணலாம் என்று தான் இருந்தேன். என்னை எப்படி காண்டாக்ட் பண்றதுன்னு தெரியாமல் பல படத்தோட ஆஃபர் மிஸ் பண்ணி இருக்கிறேன். நிறைய பேர் இந்த படத்துக்கு எல்லாம் உங்களை தான் யோசித்து இருந்தோம் என்று சொல்லுவார்கள். இருந்தாலும், சோசியல் மீடியாவில் என்னை சுச்சி என்று அழைப்பது ரொம்ப சந்தோசமாக இருக்கு என்று கூறி இருக்கிறார்.