சினிமா நடிகைகளை பொறுத்த வரை அவர்களுக்கு அழகும், வயதும் இருக்கும் வரை தான் அவர்களுக்கு பட வாய்ப்புகள் எல்லாம் கிட்டும். ஆனால்,ஒரு சில நடிகைகள் வயத்தனவுடன் பரிதாப நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அந்த வகையில் பிரபல நடிகை ஷர்மிளா, தற்போது வாழ்க்கையை நகர்த்த வழி இல்லாமல் பணத்திற்கு மிகவும் கஷ்டப்பட்டு வருகிறாராம்.
1974 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த இவர், என்னேற்ற தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் 1979 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் நடித்த நல்லதொரு குடும்பம் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அறிமுகமானார். அதன் பின்னர் படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த இவர். தற்போது படங்களில் அம்மா கத்தபதிராத்திலும் நடித்து வருகிறார். தமிழில் விஜய் ஆண்டனி நடித்த ‘நான்’ படத்தில் அவருக்கு அம்மாவாக நடித் திருப்பார்.
ஆனால்,இடையில் பட வாய்ப்புகள் எதுவும் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்படுவதாக சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் . இதுபற்றி அவர் தெரிவிக்கையில் ‘எனக்கு தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் போதிய வருமானம் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறேன்.இளம் வயதில் எனக்கு படங்களில் நடிக்க நிறைய வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அப்போது பொறுப்பில்லாமல் அந்த படவாய்ப்புகளை எல்லாம் தட்டி கழித்து விட்டேன்.
ஆனால், இப்போது நான் பொறுப்பாக இருக்கிறேன். பொறுப்பாக படப்பிடிப்புகளிலும் கலந்து கொள்கிறேன். ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு பட வாய்ப்புகள் வரவில்லை. மாதத்திற்கு ஒரு நாள் மட்டுமே ஷூட்டிங் இருக்கிறது. எனக்கு ஒரு நோய் வயப்பட்ட அம்மாவையும், எனது மகனையும் பார்த்துக் கொள்கிறேன். நான் இப்போது குடும்ப செலவிற்கு கூட பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறேன்.மகனின் படிப்பு செலவிற்கு மட்டும் நடிகர் விஷால் உதவி செய்கிறார்’ என்று மிகவும் உருக்கமாக கூறியுள்ளார் நடிகை ஷர்மிளா.