தான் வாழ்க்கையில் செய்த தவறு குறித்து மனம் திறந்து நடிகை தேவயானி அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் தேவயானி. 1993 ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமான இவர் தற்போது வரை சினிமாவில் வலம் வருகிறார். தமிழ் சினிமாவில் உள்ள விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் தேவயானி நடித்திருக்கிறார்.
மேலும் இவர் தமிழ், தெலுங்கு, பெங்காலி, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக நடிகை தேவயானி அவர்கள் சினிமா உலகில் இந்த அளவிற்கு பிரபலமாக இருப்பதற்கு காரணம் இயக்குனர் ராஜகுமாரன் தான். தேவயானியும், இயக்குனர் ராஜகுமாரனும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால், இவர்களின் காதலுக்கு தேவையானி தாய் சம்மதம் தெரிவிக்கவில்லை. தேவயானி வீட்டில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
தேவயானி திருமணம்:
பின் வீட்டிற்கு தெரியாமல், நண்பர்கள் முன்னிலையில் தேவயானி- ராஜகுமாரன் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் திருமணம் செய்து கொண்டதை அறிந்து இரு வீட்டாரும் பயங்கர கோபத்தில் இருந்தார்கள். அதிலும், தேவயானியின் குடும்பம் இயக்குனர் ராஜகுமாரன் குடும்பத்தின் மீது போலீஸ் புகார் எல்லாம் கொடுத்து இருந்தார்கள். பல வருடங்களுக்கு பின் இவர்கள் பஞ்சாயத்து முடிந்தது. இவர்கள் திருமணத்திற்கு பின் இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளார்கள்.
தேவயானி குறித்த தகவல்:
தற்போது தேவயானி பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். வெள்ளித்திரை மட்டுமில்லாமல் இவர் சின்ன திரையிலும் பல சீரியல்களில் நடித்துள்ளார். குறிப்பாக இவர் நடித்த ‘கோலங்கள்’ சீரியல் 6 வருடங்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடியது. இதை அடுத்து இவர் சீரியல், படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது தேவயானி அவர்கள் நிழற்குடை என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை தர்ஷன் ஃபிலிம் சார்பில் ஜோதி ஜீவா என்பவர் தயாரித்திருக்கிறார்.
தேவையானி பேட்டி:
இந்த படத்தை சிவா ஆறுமுகம் என்பவர் எழுதி இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விஜித், கண்மணி, இளவரசு, ராஜ் கபூர், வடிவுக்கரசி, நீலிமா உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் வரும் மே 9ஆம் தேதி திரையரங்களில் வெளியாக இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை தேவயானி அவர்கள் தன்னுடைய திருமணம் குறித்து கூறியிருந்தது, என்னுடைய வாழ்க்கையில் நான் என் அம்மாவை மீறி செய்த ஒரே விஷயம் என்னுடைய திருமணம் தான்.
திருமணம் பற்றி சொன்னது:
நாட்கள் செல்ல செல்ல அது சரியாகிவிடும் என்று நினைத்தேன். ஆனால், அது சரியாகவே இல்லை. எனக்கு முதல் குழந்தை பிறந்தது. இருந்தும் என்னுடைய அம்மா என்னை பார்க்கவே வரவில்லை. அது எனக்கு ரொம்பவே வேதனை அளித்தது. இரண்டாவது குழந்தையும் பிறந்தது. அதற்குப்பின் சில ஆண்டுகள் கழித்து தான் என்னுடைய அம்மா என்னை பார்த்தார். நான் அம்மான பிறகு தான் எனக்கு அது எவ்வளவு பெரிய தவறு என்று புரிந்தது. எல்லாம் என் தலையில் எழுதி இருக்கிறது என்று கூறியிருக்கிறார்