திருமணம் செய்து கொள்வதாக பணம், நகை ஏமாற்றிய நடிகர் காதல் சுகுமார்- போலீசில் புகார் அளித்த துணை நடிகை

0
54
- Advertisement -

நடிகர் காதல் சுகுமார் மீது துணை நடிகை ஒருவர் புகார் கொடுத்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உள்ள நகைச்சுவை நடிகர்களில் சுகுமாரும் ஒருவர். இவர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளியான “காதல்” படத்தில் நகைச்சுவை நடிகராக நடித்து இருந்தார். இந்த படத்தில் பரத், சந்தியா நடித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

இந்த படத்தின் மூலம் நடிகர் சுகுமார் மக்களிடையே பிரபலமானார். அதுமட்டும் இல்லாமல் காதல் படத்திற்கு முன்பாகவே இவர் கமலுடன் விருமாண்டி என்ற படத்தில் நடித்து இருந்தார். அதன் பின் இவர் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், அறை எண் 305ல் கடவுள், விசிடி, என் ஆளோட செருப்ப காணோம்’ போன்ற பல படங்களில் நடித்து இருந்தார். இதை தொடர்ந்து நடிகர் சுகுமார் அவர்கள் கடைசியாக 2018 ஆம் ஆண்டு வெளி வந்த ‘மனுஷனா நீ’ என்ற படத்தில் நடித்து இருந்தார்.

- Advertisement -

சுகுமார் திரைப்பயணம்:

இதுவரை இவர் தமிழ் சினிமாவில் 50க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி, குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தார். இருந்தாலுமே இவருடைய கதாபாத்திரங்கள் பெரிதாக மக்கள் மத்தியில் பிரபலமடையவில்லை. மேலும், இவர் சினிமா உலகில் நடிகர் மட்டும் இல்லாமல் சில படங்களை இயக்கிய இயக்குனர் ஆவார். அந்த வகையில் இவர் 2015 ஆம் ஆண்டு ‘திருட்டு விசிடி’ என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தை நடிகை சாக்ஷி தான் நடித்திருந்தார்.

சுகுமார் இயக்கிய படங்கள்:

சிறிய பட்ஜெட்டாக வெளியான இந்த படம் பெரிதாக கவனிக்கப்படவில்லை. இதை தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு சும்மாவே ஆடுவோம் என்ற படத்தையும் இயக்கி இருந்தார். இந்த படமுமே தோல்வி அடைந்தது. அதற்குப்பின் இவர் படங்களை இயக்குவதை நிறுத்திவிட்டார். தற்போது இவர் படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி கொண்டு இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் நடிகர் காதல் சுகுமார் மீது துணை நடிகை ஒருவர் புகார் கொடுத்திருக்கும் தகவல் தான் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

-விளம்பரம்-

காதல் சுகுமார் மீது புகார்:

அதாவது, துணை நடிகை ஒருவர் வடபழனி காவல் நிலையத்தில் காதல் சுகுமார் மீது புகார் அளித்திருக்கிறார். அதில் அவர், எனக்கு ஏற்கனவே திருமணம் விட்டது. ஆனால், நான் கணவரை விட்டு பிரிந்து தனியாகத்தான் வாழ்ந்து வருகிறேன். அதற்கு பிறகு தான் காதல் சுகுமாருடன் நட்பு ஏற்பட்டது. நாங்கள் இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்தோம். பின் என்னை திருமணம் செய்து கொள்வதாகவும் அவர் சொன்னார். மூன்று வருடங்களாக திருமணம் செய்து கொள்ளலாம் என்று கேட்கும்போதுமெல்லாம் அவர் தாமதம் செய்து வந்தார்.

புகாரில் சொன்னது:

அதோடு என்னுடைய நகை, பணம் எல்லாத்தையும் ஏமாற்றி வாங்கி விட்டார். இப்போது திருமணம் பற்றி பேசினால், நீ ஏற்கனவே திருமணம் செய்தவள். என்னால் உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று சாக்கு சொல்லி தப்பிக்கிறார். என்னை ஏமாற்றி விட்டார் என்று கூறினார். தற்போது இந்த துணை நடிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் காதல் சுகுமார் மீது விசாரணை நடத்தி இருக்கிறார்கள். இந்த சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement