சொத்த பாத்துக்க சொல்லி கொடுத்தா அத அபகரிச்சிட்டாரு – நடிகை கௌதமி போலீசில் பரபரப்பு புகார்.

0
1816
Gauthami
- Advertisement -

கோடிக்கணக்கில் மதிப்புள்ள நிலத்தை அபகரித்து விட்டார்கள் என்று நடிகை கௌதமி அளித்திருக்கும் புகார் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நடிகை கௌதமி அவர்கள் சென்னை பெருநகர காவல் துறையில் நேற்று திங்கட்கிழமை அன்று தன்னிடம் இருந்து கோடிக்கணக்கான மதிப்புள்ள நிலத்தை அபகரித்து விடுத்தார்கள் என்று புகார் அளித்திருக்கிறார். அந்த புகாரியில் அவர் கூறியிருப்பது, நான் இதுவரை 125க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறேன்.

-விளம்பரம்-

நான் 17 வயதிலிருந்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். பின் கடந்த 2004 ஆம் ஆண்டு நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டேன். அதனால் சினிமாவிலிருந்து நான் சிறிய இடைவெளி எடுத்துக் கொண்டேன். அப்போதிலிருந்து படத்தின் மூலம் சம்பாதித்து சேர்த்து வைத்த பணத்தில் ஸ்ரீபெரும்புதூரில் 46 ஏக்கர் நிலம் வாங்கினேன். தற்போது அந்த இடத்தினுடைய மதிப்பு 25 கோடி. என்னுடைய குடும்பத் தேவைக்கும் மருத்துவ சிகிச்சைக்கும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள இடத்தை விற்கலாம் என்று முடிவு செய்தேன்.

- Advertisement -

கௌதமி அளித்த புகார்:

இதனால் கட்டுமான நிறுவன அதிபர் அழகப்பன் என்பவரிடம் தொடர்பு கொண்டு என்னுடைய நிலத்தை விட்டு தருமாறு கேட்டேன். பின் என்னுடைய நிலத்தை விற்று தருவதற்கான முழு அதிகாரத்தையும் அழகப்பனுக்கு கொடுத்தேன். அந்த நேரத்தில் அவர் என்னிடம் பல்வேறு பத்திரங்களில் கையெழுத்து வாங்கினார். அதுமட்டுமில்லாமல் இந்த பத்திரங்கள் எல்லாம் நான் தவறான வழியில் பயன்படுத்த மாட்டேன் என்று உத்தரவாதம் அளித்தார்.

கௌதமி வைத்த கோரிக்கை:

ஆனால், நான் எனது கையெழுத்தை மோசடியாக போட்டு அழகப்பனும் அவருடைய குடும்பத்தினரும் என்னுடைய நிலத்தை அபகரித்து மோசடி செய்திருக்கின்றனர். இது குறித்து கேட்டால் எனக்கு கொலை மிரட்டல் விடுகின்றனர். எனக்கு சொந்தமான 25 கோடி மதிப்பிலான நிலத்தை மீட்டு அழகப்பன் மற்றும் அவர் குடும்பத்தினர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். தற்போது கௌதமி அளித்திருக்கும் புகார் தான் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

-விளம்பரம்-

கௌதமி திரைப்பயணம்:

தென்னிந்திய சினிமா உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை கௌதமி. தமிழில் கடந்த 1988 ஆம் ஆண்டு ரஜினியின் குருசிஷ்யன் படத்தின் மூலம் ஆண்டு இவர் தமிழில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து கமலுடன் அபூர்வ சகோதரர்கள் படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனை தொடர்ந்து இவர் தமிழில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருந்தார். மேலும், இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல்வேறு மொழி படங்களிலும் நடித்துஇருக்கிறார்.

கௌதமி கடைசியாக நடித்த படம்:

கடைசியாக இவர் கமல்ஹாசன் நடிப்பில் வந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த பாபநாசம் படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது. தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்த கௌதமி இடையில் படங்களில் நடிக்கவில்லை. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கௌதமி சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். தற்போது கௌதமி அவர்கள் நிகழ்ச்சி,சினிமா என்று கவனம் செலுத்தி வருகிறார். அதோடு இவர் அரசியலிலும் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார்.

Advertisement