40 வருடம் முழு சம்பள பாக்கியை காத்திருந்து கொடுத்த தயாரிப்பாளர்.. இப்படி ஒரு மனிதரா..

0
14940
urvasi-saratha
- Advertisement -

சினிமா துறையில் உள்ள தயாரிப்பாளர் ஒருவர் 40 வருடங்கள் கழித்து தன் படத்தில் நடித்த நடிகைக்கு தர வேண்டிய சம்பள பாக்கியை திருப்பித் தந்தார். இது ரொம்பவே அதிர்ச்சியூட்டும் தகவலாக இருக்கிறது அல்லவா. அப்படி தான் எங்களுக்கும் இருந்தது. இப்ப எல்லாம் நேற்று கொடுத்த பணத்தை திருப்பி கேட்டாலே, ஞாபகம் இல்லைன்னு எஸ்கேப் ஆகுற இந்த காலத்துல 40 வருடங்கள் கழித்து பணத்தை திருப்பித் தந்துள்ளார் தயாரிப்பாளர். அது மட்டும் இல்லைங்க சம்பளத்தை முழுசும் கொடுத்தால்தான் படத்தில் நடிப்போம் என்றும், சம்பள பாக்கி எதுனா இருந்தா படத்தை வெளியிட பிரச்சனை செய்வோம் என்று சொல்லுகிற இந்த காலத்தில் 40 வருடங்கள் கழித்து சம்பளம் தருவது ரொம்ப பெரிய விஷயங்கள். இவருடைய செயல் சும்மா மாஸ் காட்டுது கூட சொல்லலாம். மேலும், இவரின் இந்த செயலை பாராட்டி , வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள் நெட்டிசன்கள். அந்த தயாரிப்பாளர் வி.வி. ஆன்டனி ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் ரவுண்டு கட்டி உள்ளார்.அந்த நடிகை யாருன்னா ? பழம்பெரும் நடிகையான ஊர்வசி சாரதா தான்.

-விளம்பரம்-
Image result for ஊர்வசி சாரதா

மேலும்,இவரிடம் தான் சம்பள பாக்கியை கொடுத்து இருக்கிறார் தயாரிப்பாளர் ஆண்டனி. இந்த தகவல் முழுவதும் உண்மையானது, சரியானது என கூறப்பட்டு வருகிறது. இது குறித்து சாரதாவிடம் கேட்டபோது கூறியது, நான் “புஷ்ய ராகம்” என்னும் மலையாள படத்தில் நடித்தேன். இந்த படம் 1979இல் ரிலீஸ் ஆச்சுன்னு நினைக்கிறேன். அதை தயாரிப்பாளர் ஆண்டனி சொல்லி தான் எனக்கு நினைவுக்கு வந்தது. இந்த படத்தில் நடித்ததிற்கு அவர் சம்பள பாக்கி தரணும் என கூறிய வார்த்தை எனக்கு இப்ப யோசித்த பிறகு தான் ஞாபகத்துக்கு வருது. மேலும், அந்த படத்துக்கான சூட்டிங் எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் தான் நினைவில் இருக்கு.ஏன்னா, எனக்கு ரொம்ப வயசாயிடுச்சி இல்லப்பா. இதில் என்ன ஒரு ஆச்சரியம்ன்னா வயசுல என்ன விட ரொம்ப பெரியவர் ஆண்டனி. ஆனா, அந்த நல்ல மனுஷன் இன்னும் மறக்காமல் ஞாபகம் வைத்திருந்து என் சம்பளம் பாக்கி கொடுத்து இருக்காரு.

- Advertisement -

எப்பவுமே ‘கஷ்டப்பட்டு உழைக்கிறவங்க பணம் வீண் போகாது’ என்ற பழமொழி என் வாழ்க்கையில் நிஜம் ஆயிடுச்சி. மேலும், அவருடைய நேர்மைக்கும், நியாயத்திற்கும் நான் தலை வணங்குகிறேன் என்று கூறினார். இதை தொடர்ந்து மலையாளத்தில் நான் நடித்த ஒரு படம் 50 ஆண்டு ஆயிடுச்சு. அதை கொண்டாடும் விதமாக ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. இந்த நிகழ்ச்சிக்கு என்னையும் அழைத்திருந்தார்கள்.அந்த நிகழ்ச்சிக்கு ஆண்டனியும் வந்திருந்தார். மேலும், சினிமா நிகழ்ச்சி தான எல்லாருமே வந்து இருக்கிற மாதிரிதான் ஆண்டனியும் வந்திருப்பார் என்று நான் நினைச்சேன். ஆனா, எனக்கு பின்னாடி தான் தெரிஞ்சது நான் அந்த நிகழ்ச்சியில் கலந்துகிறேன் தெரிஞ்சு தான் அவர் வந்து இருக்கிறார். அதுவும், எனக்கு வச்சிருக்க சம்பள பாக்கியை எப்படியாவது இந்த நிகழ்ச்சியில் கொடுத்து தன்னுடைய கடனை தீர்த்துக் கொள்ள வேண்டும் என வந்திருந்தாரு.

Image result for ஊர்வசி சாரதா

நாங்கள் நிகழ்ச்சி முடிந்து பேசிக்கொண்டிருந்த போது என்னுடைய கையில ஒரு கவரைக் கொடுத்தார். அந்த கவரை கொடுத்து உங்களுடைய பழைய பாக்கி குறித்து இனிமேல் எந்த பேச்சும் இல்லை. இதோட உங்களுக்கும் எனக்குமான கட முடிஞ்சது என்று கூறினார். அப்பதான் எனக்கு அவர் சம்பள பாக்கி வச்சதே எனக்கு ஞாபகத்தில் வந்துச்சு. ஆனால், நான் என்னன்னு கேட்டதுக்கு அவரு பழைய படத்தோடு ஸ்ட்டில் என்று கூறினார். நான் அமைதி ஆயிட்டேன். அதற்கு பின்னர் நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்து பார்த்த பின்னர்தான் கவருக்குள் 10 ஆயிரம் ரூபாய் பணம் இருந்துச்சு.

-விளம்பரம்-

எனக்கு ரொம்ப பதட்டமா ஆயிருச்சு. உடனே நான் அவருக்கு போன் போட்டு கேட்டபோதுதான், அவர் புஷ்ய ராகம் படத்தில் நீங்கள் நடிச்சதுக்கு 2000 ரூபாய் பாக்கி தருணம். ஆனால், அந்த தொகையோடு மதிப்பு இப்ப பலமடங்கு ஆயிருச்சு. ஆனா, என்னால முடிஞ்ச வரை தந்து இருக்கேன்னு கூறினார்.மேலும், கொச்சியில் நடந்த விழாவில் கலந்து கொண்டு 40 வருடங்கள் கழித்து அவர் பணம் கொடுத்த இந்த நிகழ்ச்சி என்னை ரொம்ப நெகிழவைத்தது. அது மட்டும் இல்லைங்க இப்படிப்பட்ட நேர்மை கொண்ட தயாரிப்பாளர்கள் இந்த காலத்துல கண்டு எடுக்கறது ரொம்ப கஷ்டங்க என்று கூறினார் சாரதா.

Advertisement