வருஷத்துக்கு 15 படம் நடிச்சேன், ஆனா பல வருசமா சினிமாவில் நடிக்காததுக்கு காரணமே அவர் தான்.

0
1502
gouthami
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை கௌதமி. தமிழில் கடந்த 1988 ஆம் ஆண்டு ரஜினியின் குருசிஷ்யன் படத்தின் மூலம் தான் இவர் தமிழில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து கமலுடன் அபூர்வ சகோதரர்கள் படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனை தொடர்ந்து இவர் தமிழில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து உள்ளார். இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல்வேறு மொழி படங்களிலும் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

கடைசியாக இவர் கமல்ஹாசன் நடிப்பில் வந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த பாபநாசம் படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதன் பின்னர் 1998 ஆம் ஆண்டு சந்தீப் பாட்டியா என்னும் தொழில் அதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் கவுதமி.ஆனால் 1999 ஆம் ஆண்டு இருவருக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று விட்டனர். இந்த தம்பதியருக்கு சுப்புலட்சுமி என்ற ஒரு மகள் இருக்கிறார்.

- Advertisement -

அதன் பின்னர் 2005 ஆம் ஆண்டு முதல் தனது நண்பர் கமலுடன் காதல் ஏற்பட்டு இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். கிட்டத்தட்ட 10 வருடங்கள் ஓரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்த இவர்கள் கடந்த ஆண்டு பிரிந்து விட்டனர். தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்த கௌதமி இடையில் படங்களில் நடிக்கவில்லை, இதுகுறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ள அவர், நான் சினிமாவுக்கு வருவேன் என்றோ அரசியலில் ஈடுபடுவேன் என்றோ நினைத்து பார்க்கவில்லை.வருடத்துக்கு 15 படங்கள் வரை நடித்தேன். ஏழரை வருடங்களில் 120 படங்களில் நடித்து விட்டேன். அது பெரிய சாதனை. 

திருமணம் ஆகி 3 ஆண்டுகளில் அந்த உறவு அறுந்து போனது. ஆனாலும் எனது வாழ்க்கையில் நான் தனிமையாக இல்லை. எனக்குள்ளேயே நான் இருக்கிறேன். எந்த விஷயம் ஆனாலும் எனது மகளிடம் மனம் விட்டு பேசுகிறேன். எனது மகள் சுப்புலட்சுமிக்கு சினிமாவில் நடிக்க ஆர்வம் இல்லை.சினிமாவில் நடிக்க வேண்டும் என்றாலும் எனக்கு ஆட்சேபனை இல்லை. எல்லாம் அவளுடைய விருப்பம்தான். இத்தனை காலம் சினிமாவில் நடிக்காமல் இருந்ததற்கு எனது மகள்தான் காரணம் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement