ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் இத்தனை குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வரும் ஹன்சிகா – அடடா,இவங்கல்லவா உண்மையான லேடி சூப்பர் ஸ்டார்.

0
351
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. ஷக்கலக்கா பூம் பூம் என்ற சீரியலின் மூலம் தான் ஹன்சிகா ஹன்ஷிகா தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கினார். அதன் பின் இவர் இந்தியில் வெளியான கோய் மில் கயா, ஹவா, ஆப்ரா கா டாப்ரா, ஜாகோ, போன்ற பல சீரியல்களில் குழந்தைக்கு நட்சத்திரமாக நடித்து இருக்கிறார்.பின்னர் நடிகர் அல்லு அர்ஜின் நடித்திருந்த தெலுங்கில் வெளியான “தேசமுதுரு” என்ற படம் மூலம் தான் ஹன்சிகா வெள்ளித்திரைக்கு முதன் முதலாக அறிமுகமாகினார்.

-விளம்பரம்-

திரைப்பயணம் :

அதன் பின்னர் இவர் தனுஷ் நடித்திருந்த “மாப்பிள்ளை” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். அதனை தொடர்ந்து இவர் வேலாயுதம், எங்கேயும் காதல், பிரியாணி, ஆம்பள, புலி, ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம்-2, சேட்டை, ரோமியோ ஜூலியட், போகன், குலேபகாபலி, மான் கராத்தே, அரண்மனை 1 மற்றும் 2 ,என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் பிற மொழி படங்களில் நடித்து இருக்கிறார். நடிகர் விக்ரம் பிரபு நடித்திருந்த துப்பாக்கி என்ற திரைப்படத்தில் 2018ஆம் ஆண்டு கடைசியாக ஹன்சிகா நடித்திருந்தார்.

- Advertisement -

திருமணம் :

அதன் பின் இவர் கடந்த இரண்டு வருடங்களாக எந்த திரைபடத்தில் நடிக்காமல் இருந்தார். சமீபத்தில் வெளியான “மஹா” என்ற திரைப்படத்தில் ஹன்ஷிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த நிலையில் தான் தனது நீண்ட நாள் நண்பர் மற்றும் தொழில் கூட்டாளியுமான சோஹைல் கதுரியா என்பவரை காதலித்து வந்து கடந்த வருடம் 4 ஆம் தேதி 450 ஆண்டுகள் பழமையான ஜெய்ப்பூர் அரண்மனையில் ஒரு வாரம் கோலாகலமாக நடந்தது.

31 குழந்தைகளை தத்தெடுத்துள்ள ஹன்ஷிகா :

மேலும் இதற்கிடையே ஹன்சிகா அவர்கள் தன்னுடைய திருமணத்தை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு விருந்து கொடுத்திருக்கிறார். ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையை சுற்றி வசிக்கும் குழந்தைகளுக்கு திருமண உணவுகளை வழங்க தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் ஏற்பாடு செய்திருந்தார். இதற்கு பாராட்டுக்கள் குவிந்த நிலையில் மீண்டும் ஒரு செயலை செய்துள்ளார். அதாவது ஹன்ஷிகா 31 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

-விளம்பரம்-

குழந்தைகளுக்கு புத்தாடை :

ஹன்ஷிகா ஒரு பேட்டியில் கூறுகையில் `குழந்தைகளை தத்தெடுக்க காரணம் என்னுடைய அம்மாதான். கடவுள் இருப்பதினால் தான் என்னுடைய வழக்கை சரியாக கொண்டிருக்கிறது. பண்டிகை நாட்களில் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என என்னுடைய அம்மா சிறு வயதிலேயே சொல்லி கொடுத்திருக்கிறார். அதனால் தான் நாயகியாகிய பிறகும் கூட 31 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. பொங்கலை முன்னிட்டு குழந்தைகளுக்கு புத்தாடைகள் எடுத்து கொடுத்தேன் அப்போது குழந்தைகளின் சந்தோஷத்தை வார்த்தைகளே இல்லை என்று கூறினார்.

குவியும் பாராட்டுக்கள் :

மேலும் தான் திருமணத்திற்கு பிறகு ஓய்வு எடுக்கவும் சமீபத்தில் தான் விளம்பர படப்பிடிப்பில் கலந்து கொண்டதாகவும் தெரிவித்தார். அதோடு வரும் 20 தேதியில் இருந்து இடைவெளி இல்லாமல் சுமார் 7 படங்களில் தொடர்ந்து நடக்க வுள்ளதாகவும், அவற்றில் 2 வெப் சீரிஸ் என்பதினால் வரும் நாட்களில் தான் மிகவும் பிசி என்று கூறினார். இந்நிலையில் ஹன்ஷிகா ஒரு நடிகையாக மட்டும் இல்லாமல் தத்தெடுத்து குழந்தைகளுக்கு இந்த மாதிரியான விஷியங்கள் செய்வது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

Advertisement