-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

இலக்கியா தொடரில் இருந்து திடீரென விலகுவதாக அறிவித்த ஹிமா பிந்து – அவரே சொன்ன காரணம்.

0
275

சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஹீமா பிந்து. இவர் ஆந்திராவை சேர்ந்தவர். இவருடைய குடும்பம் சினிமா துறையை சேர்ந்தவர்கள் என்பதால் இவருக்கும் சினிமாவின் மீது சிறு வயதிலிருந்து ஆசை ஏற்பட்டது. பின் கல்லூரி படிக்கும் போது ஹீமா பிந்து ரிலீஸ் வீடியோ, போட்டோ ஷூட் புகைப்படம் என செய்து கொண்டிருந்தார். அது மட்டும் இல்லாமல் இவர் எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார். இதனால் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள்.

-விளம்பரம்-

அதன் மூலம் தான் இவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி சமீபத்தில் முடிவடைந்த இதயத்தை திருடாதே என்ற சீரியலில் சஹானா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த சீரியல் ஆயிரம் எபிசோடுகளை கடந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. இந்த சீரியல் அரசியல் ஆதாயங்களுக்காக `கல்யாணம்’ என்ற பெயரில் இருவரின் வாழ்க்கை நடக்கும் கதை. இந்த சீரியலின் இரண்டு சீசன்களுமே ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி அடைந்தது.

இலக்கியா சீரியல்:

அதன் பின் ஹீமா பிந்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இலக்கியா என்ற தொடரில் நடித்துக் கொண்டு வருகிறார். இந்த சீரியலில் கதாநாயகியாக ஹீமா பிந்து, கதாநாயகனாக நந்தன் லோகநாதன் நடிக்கிறார்கள். இவர்களைத் தொடர்ந்து இந்த சீரியலில் மீனா வேமுறி, சுஷ்மா நாயர், ஜெய் ஸ்ரீனிவாசா, காயத்ரி ப்ரியா உட்பட பலர் நடிக்கிறார்கள். மேலும், இந்த சீரியல் தொடங்கிய நாளிலிருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது.

சீரியலை விட்டு விலகிய ஹீமா பிந்து:

-விளம்பரம்-

சமீபத்தில் தான் இந்த சீரியலில் இருந்து வில்லி மற்றும் கதாநாயகனின் அம்மா ரோல், கதாநாயகன் நந்தன் தம்பியாக நடித்து இருந்தவர்கள் எல்லோரும் மாற்றம் செய்து இருந்தார்கள். இப்படி சீரியல் இருந்து முக்கியமான நபர்கள் விலகினாலும் சீரியல் நன்றாக தான் சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் சீரியலின் கதாநாயகியான ஹீமா பிந்து விலகி இருக்கும் தகவல் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

-விளம்பரம்-

ஹீமா பிந்து பதிவு:

மேலும், இது தொடர்பாக ஹீமா பிந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பது, கனத்த இதயத்துடன் நான் இலக்கியா சீரியலில் இருந்து வெளியேற முடிவெடுத்து இருக்கிறேன். என்னுடைய இந்த முடிவு உங்களை பாதிக்கும். அதற்காக நான் மன்னிப்பையும் கேட்டுக்கொள்கிறேன். இதற்காக நீங்கள் வருந்த வேண்டாம். சீரியலையும், படத்தையும் பேலன்ஸ் செய்வது ரொம்ப பெரிய விஷயம். இது எனக்கு மட்டும் இல்லாமல் இலக்கியாவில் என்னுடன் நடிக்கும் சக நடிகர்களுக்கும் பொருந்தும். இது பிரஷரையும் மன அழுத்தத்தையும் எனக்கு ஏற்படுத்தியது.

சீரியலை விட்டு விலக காரணம்:

இதனால் இந்த ப்ராஜெக்ட் சீர்குலைவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்த நிமிடம் வரை இலக்கியாவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்குமே என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுடைய தொடர் அன்பையும் ஆதரவையும் இலக்கியா சீரியலில் நடிப்பவர்களுக்கு கொடுங்கள். என்னை புரிந்து கொண்டமைக்கும், என்னுடைய முடிவுக்கு பக்கபலமாக என்னுடன் இருப்பதற்கும் நன்றி என்று கூறியிருக்கிறார். மேலும் இலக்கிய சீரியலில் ஹீமா பிந்து நடித்த கதாபாத்திரத்தில் கண்மனி தொடரில் நடித்த நடிகையும், தொகுப்பாளியும் ஆன சாம்பவி நடிக்க இருக்கிறார்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news