தன்னுடைய 12வயதில் சினிமாவில் குரூப் டான்ஸ் மூலம் தனனுடைய சினிமா வலக்கையை தொடங்கி அதற்கு பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் ஜெயமாலினி. இவர் பல படங்களில் கவர்ச்சியான காட்சிகளில் நடிப்பதன் மூலம் பிரபலமானார். ஜெயமாலினி கடந்த 1974 ஆம் ஆண்டு பி.விட்டலாச்சார்யாரின் “ஆதாதானி அத்ருஷ்டம்” என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.
பின்னர் சேலம் விஷ்ணு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். 70கள் மற்றும் 80களின் தமிழ்த் திரைப்படங்களில் வரும் பாடல்களில் இருக்கும் இவரது நடனம் அந்த காலத்து இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த்து. மேலும் தன்னுடைய முதல் தெலுங்கு படமான அதாதானி அத்ருஸ்டம் என்ற படத்தில் ஜெயமாலினியின் கொடுத்த நடிப்பு மற்றும் கவர்ச்சி அவருக்கு அதிக படங்களில் நடிக்கும் வாய்ப்பை கொடுத்து.
இவரது இயற்பெயர் அலமேலு மங்கா தான். ஆனால் அலமேலு மங்கா என்ற பெயர் திரைத்துறைக்கு பொருத்தமாக இல்லாத காரணத்தினால் தயாரிப்பாளர் விட்டலாச்சார்யா அவரது பெயரை பெயரை ஜெயமாலினி என்று மாற்றினார். பின்னர் காலப்போக்கில் அந்த பெயரே இவரது கதாபாத்திரங்களுக்கு பெயர் சொன்னது. மேலும் ஜெகன்மோகினியில் பழிவாங்கும் பெண்ணாக ஜெயமாலினி நடித்திருந்தார். இந்த படம் தெலுங்கில் தெளியான படத்தின் ரீமேக் என்றாலும் இந்த சினிமாவில் இப்படம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதே போல இவரின் அந்த கதாபாத்திரம் இன்றும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு பார்க்கப்படுகிறது.
குடும்பம் :
இந்த நிலையில் ஜெயமலானி கடந்த 1994ஆம் ஆண்டு [ஆர்திபன் என்கின்ற காவல் துறை அதிகாரியை திருமணம் செய்து கொண்ட ஜெயமலானி அதற்கு பிறகு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் தான் அவரது மகம் ஷாமிற்கு பிரியங்கா என்பவருடன் வரும் 23ஆம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ள.
மகன் திருமணம் :
ஷாம் மற்றும் பிரியா திருமணம் சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியில் உள்ள விஜிபி கோல்டன் பீச் ரிசார்ட்டில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஷாம் நடிகை ஜெயமாலனிக்கு ஒரே மகன் என்பதினால் திருமணத்தை வெகு விமர்சையாக நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதோடு இவர்களின் திருமணத்தில் தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகர்கள் கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது.