‘அவனை உயிருக்கு உயிராகக் காதலித்தேன்’ – கடிதம் எழுதிவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தமிழ் நடிகை.

0
413
Jesscia Powlen
- Advertisement -

காதல் விவகாரத்தால் திடீரென நடிகை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. சின்னத்திரை, வெள்ளி திரையில் நடிக்கும் பிரபலங்கள் காதல் தோல்வி, கடன் பிரச்சனை போன்ற பல காரணங்களால் தற்கொலை செய்து கொள்வது பலருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால், சமீப காலமாக பிரபலங்கள் பலரும் காரணம் என்னவென்றே தெரியாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

-விளம்பரம்-

தற்கொலை செய்யும் எண்ணிக்கையும் நாட்கள் செல்ல செல்ல கூடிக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது நடிகை பவுலின் என்ற தீபா தற்கொலை செய்து இருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இவர் ஆரம்பத்தில் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். பின் இவர் வாய்தா என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இயக்குனர் மகிவர்மன் இயக்கத்தில் மே மாதம் வெளியாகியிருந்த படம் வாய்தா.

- Advertisement -

தீபா திரைப்பயணம்:

இந்த படத்தை தயாரிப்பாளர் வினோத்குமார் தயாரித்து இருக்கிறார். லொஸ்ஷ்வரன் என்பவர் இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தில் நாசர், மு. ராமசாமி, தீபா புகழ் மகேந்திரன் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் பெரிய அளவில் பேசப்படவில்லை. இருந்தாலும், இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை தீபா. இதனை தொடர்ந்து இவர் சில படங்களில் கமிட்டாகி இருக்கிறார்.

நடிகை தீபா தற்கொலை:

மேலும், இவர் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள மல்லிகை அவன்யூ என்ற பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு வசித்து வந்தார். இவர் தனியாக தான் அந்த குடியிருப்பு பகுதியில் வசித்து இருக்கிறார். இந்த நிலையில் நேற்று நடிகை தீபா தன்னுடைய வீட்டிலே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கின்றார். அப்போது தீபாவின் உறவினர்கள் அவரை தொடர்பு கொள்ள முயன்று பலமுறை கால் செய்திருக்கிறார்கள். ஆனால், தீபா மொபைலை எடுக்காததால் சந்தேகம் வந்து தீபாவின் நண்பர் ஒருவருக்கு தொடர்பு கொண்டு கேட்டிருந்தார்கள்.

-விளம்பரம்-

போலீஸ் விசாரணை:

பின் தீபாவின் நண்பர் அவருடைய வீட்டை வந்து பார்த்தபோது தான் இந்த சம்பவம் தெரிய வந்தது. இதனை அடுத்து தீபாவின் சகோதரர் ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவருக்கு தகவல் கொடுத்து இருக்கிறார். அதன்பின் கோயம்பேடு காவல் நிலையத்தில் தீபாவின் தற்கொலை குறித்து புகார் அளித்து இருக்கின்றனர். பின் போலீசரும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் நடிகை கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக வெளியாகிருக்கின்றன.

நடிகை தீபா எழுதிய கடிதம்:

அதில் நடிகை தீபா எழுதி இருந்தது, நான் ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்தேன். ஆனால், காதல் கைகூடவில்லை. அதனால் இந்த உலகை விட்டு பிரிந்து செல்கிறேன். என்னுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்று கூறியிருந்தார். இப்படி நடிகை எழுதி இருந்த கடிதத்தின் மூலம் இது முழுக்க முழுக்க காதல் தோல்வி என்று தெரிய வந்திருக்கிறது. இதனை அடுத்து போலீசார் தீவிரமாக அடுத்த கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement