கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி சுற்றிற்கு ஒரு பெண் போட்டியாளர்கள் கூட இல்லாமல் இருந்த நிலையில் இந்த சீனில் பெண்கள் அதிமாக இருக்கின்றனர். இந்நிலையில் 5 பெண்களுடன் இருக்கும் பாலாஜியை கிண்டல் செய்து பிரபல நடிகை கஸ்தூரி ட்வீட் செய்துள்ளார். சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை கஸ்தூரி அத்தி பூத்தது போல இன்னிக்கு பார்த்தேன். ரித்விகா, ஐஸ்வர்யா, விஜயாலஷ்மி, ஜனனி, யாஷிகா மற்றும் பாலாஜி. அஞ்சு பொண்ணுங்களுக்கு நடுவுலே பாலாஜி மட்டும். கண்டிப்பா பஞ்ச பாண்டவிகளுக்கு மத்தியில சிக்கின ஒத்தை ஆம்பளைக்குத்தான் நல்ல சான்ஸ் என்று பதிவிட்டுள்ளார்.அத்தி பூத்தது போல இன்னிக்கு #BiggBossTamil2 பார்த்தேன். விஜயலட்சுமி யாஷிகா ஐஸ்வர்யா ரித்விகா ஜனனி and பாலாஜி அஞ்சு பொண்ணுங்களுக்கு நடுவுலே பாலாஜி மட்டும். கண்டிப்பா பஞ்ச பாண்டவிகளுக்கு மத்தியில சிக்கின ஒத்தை ஆம்பளைக்குத்தான் நல்ல சான்ஸ் !
— Kasturi Shankar (@KasthuriShankar) September 19, 2018
நடிகை காஸ்துரியின் இந்த டீவீட்டை பார்த்த ரசிகர்கள், உண்மையில் பாலாஜிக்கு வெற்றிபெற நல்ல சான்ஸ் என்று சொல்கிறீர்களா, இல்லை பாலாஜி 5 பெண்களுடன் சந்தோசமாக இருக்கிறார் என்று கூறுகிறீர்களா என்று கமன்ட் செய்துள்ளனர். மற்றும் சிலரோ ஒத்தை ஆம்பளையாருந்தாலும் எவ்வளவு கௌரமாக நடந்துகிறார் ஏம்மா உன் புத்தி இப்படி போகிறது என்று கஸ்தூரியை குறை கூறியுள்ளனர்.




