வாடகை தாய் சட்டத்தை மீறினாரா நயன்தாரா ? – பிக் பாஸ் பிரபலத்தின் பதிவால் கிளம்பிய சர்ச்சை.

0
387
nayanthaar
- Advertisement -

இரட்டை குழந்தைகள் பிறந்து இருக்கிறது என்று விக்னேஷ் சிவன் பதிவிட்ட பதிவிற்கு கஸ்தூரி போட்டிருக்கும் ட்விட் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. பல ஆண்டு காலமாக தென்னிந்திய சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருக்கிறார் நயன்தாரா. இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். அதிலும் சமீப காலமாக இவர் கதாநாயகிகுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார்.

-விளம்பரம்-

பின் அனைவரும் எதிர்பார்த்து காத்து இருந்த விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் வெகு விமர்சையாக பிரம்மாண்டமாக நடந்தது. இவர்களின் இல்லற வாழ்வு சிறக்க திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். அதோடு கடந்த ஜூன் மாதம் முழுவதும் ஹாட் டாப்பிக்காக இருந்தது விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் தான்.

- Advertisement -

இரட்டை குழந்தை பெற்ற நயன்:

மேலும், திருமணம் முடிந்த கையுடன் இந்த தம்பதிகள் ஜோடியாக ஹனி மூன் சென்று இருந்தனர். தற்போது இருவருமே படங்களில் பிசியாக பணியாற்றி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்து இருப்பதாக விக்னேஷ் சிவன்- நயன்தாரா இருவரும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து இருக்கிறார்கள். இதுகுறித்து விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டது, நயன்தாராவும், நானும் அம்மா- அப்பா ஆகிவிட்டோம்.

விக்னேஷ் சிவன் பதிவு:

எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருக்கிறது. பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசிர்வாதங்கள், நல்ல செயல்கள் எல்லாம் சேர்ந்து எங்களுக்கு ஆசிர்வதிக்கப்பட்ட இரட்டை குழந்தைகள் பிறந்திருக்கிறது. உங்கள் அனைவரின் ஆசிர்வாதம் எங்களுக்காக வேண்டும் என்று கூறியிருந்தார். விக்னேஷ் சிவனின் இந்த அறிவிப்பை தொடர்ந்து ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை கூறி இருந்தார்கள். இருந்தாலும், ஒரு சிலர் கல்யாணம் முடிந்து 4 மாதங்கள் ஆன நிலையில் எப்படி நயன்தாரா குழந்தை பெற்றார்? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

-விளம்பரம்-

கஸ்தூரி போட்ட டீவ்ட்:

அதே போல நயன்தாரா வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து அவர்கள் தரப்பில் இருந்து அறிவித்தாலே தெரியும். இந்த நிலையில் இது குறித்து நடிகர் கஸ்தூரி அவர்கள் டீவ்ட் ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர், மருத்துவர் ரீதியாக தவிர்க்க முடியாத காரணங்களை தவிர இந்தியாவில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் முறை தடை செய்யப்பட்டிருக்கிறது. இந்த சட்டம் ஜனவரி 2022 முதல் அமுலுக்கு வந்தது.

ரசிகர்கள் எழுப்பும் கேள்வி:

அடுத்த சில நாட்களுக்கு இதைப்பற்றி நிறைய கேள்விப்படுவோம் என்று கூறியிருந்தார். இப்படி கஸ்தூரி பதிவிட்ட பதிவு தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதியினர் வாடகத்தை சட்டத்தை மீறி இருக்கிறார்களா? இல்லை இவர்களில் யாருக்காவது ஒருவருக்கு உடல் ரீதியான குறைபாடு இருக்கிறதா? என்று ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

Advertisement