அவளுக்கு எவ்வளவோ செய்திருக்கிறேன், பெண்ணுரிமை பக்கம் நின்றோ கேள்வி கேட்டது போல எனக்கு தெரியவில்லை – விஜயலட்சுமிக்கு எதிராக கஸ்தூரி.

0
1579
- Advertisement -

சீமான் விஜயலட்சுமி விவகாரம் குறித்து நடிகை கஸ்தூரி அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் விஜயலட்சுமி. சில ஆண்டுகளாகவே சோசியல் மீடியாவில் இவரைப் பற்றி பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் தான் உள்ளன. அதுமட்டுமில்லாமல் தனக்கு பிரச்சனை இருப்பதால் இணையத்தில் தனக்கு உதவி செய்யுங்கள் என்றும் இவர் வீடியோ போட்டிருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

-விளம்பரம்-

இதனிடையே நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தன்னை மூன்று வருடமாக காதலித்து விட்டு திருமணம் செய்து கொள்ளவதாக சொல்லி தற்போது மறுக்கிறார் என்று போலீசில் புகார் செய்திருந்தார். இது தொடர்பாக விஜயலக்ஷ்மி வெளியிட்ட வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. ஒரு கட்டத்தில் விஜயலக்ஷ்மி தற்கொலைக்கு கூட முயன்று இருந்தார். ஆனால், சமீப காலமாக சீமானை பற்றி எந்த விஷயத்தையும் பேசாமல் இருந்து வந்த விஜயலக்ஷ்மி சமீபத்தில் சீமான் மீது மீண்டும் போலீசில் புகார் அளித்திருக்கிறார்.

- Advertisement -

கஸ்தூரி அளித்த பேட்டி:

இந்நிலையில் இது தொடர்பாக நடிகை கஸ்தூரி கூறியிருப்பது, பொதுவாகவே ஆண் -பெண் காதலிக்கிறார்கள். அவர்கள் இதையே பல பிரச்சினைகள் வருகிறது. அது மட்டும் இல்லாமல் ஒரு ஆண் ஒரு பெண்ணை மட்டும் காதலிப்பதில்லை. அதேபோல ஒரு பெண் ஒரே ஒரு ஆணை மட்டும் காதலிப்பதில்லை. பின் வீட்டில் ஒத்துக் கொள்ளவில்லை என்றவுடன் அந்த பெண் காதலித்த நபரை விட்டு செல்கிறார். இன்னும் சில இடங்களில் ஒரு ஆண் பெண்களை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி பொய்யான வாக்குகளை கொடுத்து பிரிந்து செல்கிறார். இப்படி காதலிக்கும் போது உண்மையாக, நன்றாக காதலித்து விட்டு ஏதோ ஒரு காரணத்திற்காக இருவருக்கும் மத்தியில் காதல் பிரிவு ஏற்படுகிறது.

விஜயலக்ஷ்மி குறித்து சொன்னது:

பின் அவன் தன்னை ஏமாற்றி விட்டான் என்று சொல்லி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிப்பது எல்லாம் சட்டத்தில் இடமில்லாத ஒன்று. ஒருவேளை புகார் அளிக்க வேண்டும் என்றால், அந்த உறவில் உங்களுக்கு பாலியல் துன்புறுத்தல் ஏற்பட்டாலோ, கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லி ஏமாற்றி விட்டாலோ மட்டும் தான் புகார் அளிக்க முடியும். சீமான் விஷயத்திலும் மூன்று வருடம் குடும்பம் நடத்திவிட்டு இருவரும் உடல் உறவில் இருந்து பின் என்னை அவர் ஏமாற்றி விட்டார் என்று சொல்வதெல்லாம் சட்டத்தில் ஏற்றுக்கொள்ள முடியாதது. எனக்கு விஜய் மாவை ரொம்ப பிடிக்கும். அவர் தற்கொலை முயற்சி செய்யும்போது முதலில் நான் தான் அவருடன் இருந்தேன்.

-விளம்பரம்-

கஸ்தூரி சொன்ன அறிவுரை:

அவளுக்கு நான் நிறையவே செய்திருக்கிறேன். ஆனால், தற்போது நான் இப்படி ஒரு பேட்டி கொடுத்திருப்பது அவள் என்னை ரொம்பவும் திட்டுவாள். அப்படி இல்லை என்றால் எனக்கு வீடியோ வெளியிட வாய்ப்பு இருக்கிறது. சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதற்கு அவருக்கு நிச்சயம் வாய்ப்பு இருக்கிறது. அவள் அதை எல்லாம் விட்டுவிட்டு தினமும் தன்னுடைய பர்சனல் குறித்து பேசிக் கொண்டிருக்கிறார். இது அவருடைய எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்கும். இந்த விஷயத்தில் அவர் நீதி கேட்டோ, பெண்ணுரிமை பக்கம் நின்று பேசியது போல எனக்கு தெரியவில்லை.

சீமான் குறித்து சொன்னது:

அவர் வைக்கும் ஒரே குற்றச்சாட்டு சீமான் என்னை ஏமாற்றிவிட்டார் என்பதுதான். உண்மையில் சீமான் ஏமாற்றி இருக்கிறார் என்பதை நாம் எப்படி கண்டுபிடிக்க முடியும். அப்படியே ஒருவர் மிகப்பெரிய குற்றம் செய்திருந்தாலும் கூட அதை 10 வருடங்கள் கழித்து தூசி தட்டுவது என்பது நடக்காத ஒன்று. எப்படியாவது சீமானை கைது செய்ய வேண்டும் என்று லட்சுமியை பகடைக்காயாய் பயன்படுத்துகிறாரோ என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. என்னை பொறுத்தவரை இது ஒரு பழிவாங்கும் முயற்சி தான். லட்சுமி பொருளாதார உதவியை நாம் தமிழர் கட்சி சார்பிலும் என்னிடமும் பெற்றிருக்கிறார். இதெல்லாம் தேவையில்லாத வீண் வேலை என்று கூறியிருக்கிறார்.

Advertisement