திருமணத்திற்கு பின் நோயால் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்ட நடிகை காதல் சந்தியா ..!

0
1685
Sandhya
- Advertisement -

பிரசவத்துக்குப் பிறகான போஸ்ட்பார்டம் ப்ளூஸ் (Postpartum blues) எனப்படும் மன அழுத்தப் பிரச்னையால் பாதிக்கப்படும் தாய்மார்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இந்தச் சிக்கல் குறித்து விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில், தானும் அந்தச் சிக்கலை எதிர்கொண்ட விதம் குறித்துப் பகிர்கிறார், நடிகை ‘காதல்’ சந்தியா.

-விளம்பரம்-

Kathalsandhya

- Advertisement -

“என் மகள் ஷேமாவுக்கு ரெண்டரை வயசாகுது. பிரசவத்துக்குப் பிறகு, எனக்கு போஸ்ட்பார்டம் ப்ளூஸ் பிரச்னை ஏற்பட்டுச்சு. ‘இது இயல்பான பிரச்னைதான். ரொம்ப கவலையும் வலியும் இருக்கும். காரணமே இல்லாம தினமும் ஒருமுறையோ, சிலமுறையோ அழுகை வரும். அப்போதெல்லாம் கவலை தீர அழுதுடுங்க. உங்க உணர்வைப் பிறரால் புரிஞ்சுக்கிறது கடினமா இருக்கலாம். அதற்காக விரக்தி அடையாதீங்க. இதுக்காக வருத்தப்படாதீங்க. கொஞ்ச காலம் சிரமா இருந்தாலும், அதை எதிர்கொண்டு, குழந்தையை நல்லபடியா பார்த்துக்கோங்க’னு சொன்னார்.

கிட்டதட்ட இரண்டு மாதம், தினமும் மாலை 5 – 7 மணி வரை அழுவேன். இயல்பா அந்த நேரத்தில் அழுகை வந்திடும். போஸ்ட்பார்டம் ப்ளூஸ் பிரச்னையால் நான் அடைந்த வேதனையும் வலியும் ரொம்ப கடினமானது. என் குடும்பத்தினர் என் நிலையைப் புரிஞ்சுக்கிட்டதால், ரொம்ப சப்போர்டிவா இருந்தாங்க.

-விளம்பரம்-

கொஞ்ச காலம் கழிச்சி அந்தப் பிரச்னை தானாகவே சரியாகிடுச்சு. அப்புறம், எனக்குத் தெரிஞ்ச தாய்மார்களுக்கு இந்தப் பிரச்னையைப் பற்றி ஆலோசனை கொடுக்க ஆரம்பிச்சேன். போஸ்ட்பார்டம் ப்ளூஸ் பிரச்னைப் பற்றி விழிப்பு உணர்வு அதிகரிக்கணும். அந்த நேரத்தில் பெண்களுக்குக் குடும்பத்தினர் சப்போர்டிவா இருக்கணும்” என்கிறார் சந்தியா.

Advertisement