இந்தாண்டு தான் திருணம் ஆச்சி, அதுக்குள்ளயா – ஆனந்திக்கு குவியும் வாழ்த்துக்கள். எல்லா நல்ல செய்தி தான்.

0
9651
anandhi
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஆனந்தி. நடிகை ஆனந்தி அவர்கள் ஆந்திர மாநிலம் தெலுங்கானாவை சேர்ந்தவர். இவர் தெலுங்கில் 2012 ஆம் ஆண்டு வெளியான “ஈ ராஜூலு” என்ற படத்தின் மூலம் தான் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் தமிழில் 2014 ஆம் ஆண்டு “பொறியாளன்” என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து தமிழில் 2014 ஆம் ஆண்டு வெளியான ‘கயல்’ படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு கயல் ஆனந்தி என்று பெயர் வந்தது.

-விளம்பரம்-
Kayal Anandhi ties the knot with Socrates in Warangal. See pics - Movies  News

இந்த கயல் படத்திற்கு பிறகு தான் இவருக்கு தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.பின்னர் த்ரிஷா இல்லனா நயன்தாரா, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, சண்டி வீரன், விசாரணை, பரியேறும் பெருமாள் போன்ற பல படங்களில் நடித்து வந்தார். இப்படி ஒரு நிலையில் கடந்த ஜனவரி மாதம் இணை இயக்குநரான சாக்ரடீஸ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

இதையும் பாருங்க : ரம்பா தொடைக்கு அப்புறம் உங்க தொடை தான் – மாளவிகாவின் மாலத்தீவு புகைப்படத்தை கண்டு மயங்கிய ரசிகர்கள்.

- Advertisement -

சாக்ரடீஸ் ‘மூடர்கூடம்’ நவீனின் மைத்துனர் ஆவார். இவர் ‘அலாவுதீனின் அற்புத கேமரா’, ‘அக்னி சிறகுகள்’ ஆகிய படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார். திருமணம் குறித்து பேசிய ஆனந்தி, நானும், சாக்ரடீசும் 4 வருடங்களாக காதலித்து வந்தோம். இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வது என்று முடிவு எடுத்திருந்தோம். அந்த நாளுக்காக இருவரும் காத்திருந்தோம். அந்த நாள் சமீபத்தில் அமைந்தது. பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டோம்.

திருமணம் செய்து கொண்டதால் சினிமாவில் இருந்து விலக மாட்டேன். தொடர்ந்து நடிப்பேன். என் கைவசம் 4 படங்கள் உள்ளன. அந்த நான்கு படங்களிலும் முதலில் நடித்துக்கொடுப்பேன். அதன் பிறகு புதிய படங்களை ஒப்புக்கொள்வேன் என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் ஆனந்தி தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருக்கிறாராம். அவருக்கு அடுத்த மாதம் வளைகாப்பு நடத்த பெற்றோர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

-விளம்பரம்-
Advertisement