‘அல்லாஹ்வுக்கு நன்றி’ தன் அம்மாவின் பிறந்தநாளுக்கு குஷ்பூ போட்ட பதிவு – ரசிகர்கள் ஆறுதல்.

0
879
kushboo
- Advertisement -

தனது அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு ட்விட்டரில் குஷ்பு பதிவிட்டு இருக்கும் உருக்கமான பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் 90 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை குஷ்பு. அந்த காலத்திலேயே இவருக்கு ரசிகர்கள் சிலை வைத்தவர்கள். மேலும், இவர் நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், தொகுப்பாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டு திகழ்கிறார். இவர் 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். பின் 1989ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

-விளம்பரம்-
Kushboo Uploaded Her Old Picture Young Actress Stunned

அதனைத் தொடர்ந்து இவர் தமிழ் சினிமா உலகில் பல படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்து இருந்தார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் கன்னடம், மலையாளம், தெலுங்கு என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது குஷ்பூ அவர்கள் குணச்சித்திர வேடங்களில் படங்களில் நடித்து வருகிறார். இவர் சினிமா படங்களில் இல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினி ஆகவும், நடுவராகவும், நடிகையாகவும் பணியாற்றி வருகிறார்.

- Advertisement -

அண்ணாத்த படம்:

அதுமட்டும் இல்லாமல் இவர் “அவ்னி சினிமாக்ஸ்” என்ற படத்தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களை தயாரித்து வருகிறார். சமீபத்தில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த ‘அண்ணாத்த’ திரைப்படத்தில் குஷ்பூ நடித்து இருந்தார். இதில் ரஜினியின் முறைப்பெண்ணாக குஷ்பூ நடித்து இருப்பார். இந்த படத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா,சூரி என்று பலர் நடித்து இருந்தார்கள். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும் வசூலும் வாரி குவித்து இருந்தது.

குஷ்பூவின் மீரா சீரியல்:

இதனை தொடர்ந்து குஷ்பூ பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். தற்போது குஷ்பு கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் மீரா என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்த தொடர் பெண்கள் சுதந்திரம், பெண்கள் உரிமை ஆகியவை மையமாகக் கொண்டதாக இருக்கிறது. இந்த தொடர் ஒளிபரப்பானதில் இருந்து தற்போது வரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, சமீப காலமாகவே குஷ்பு அரசியலில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். சமீப காலமாகவே குஷ்பு அரசியலில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார்.

-விளம்பரம்-

குஷ்பூவின் அரசியல்:

முதலில் திமுக-வில் இணைந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கி இருந்தார் குஷ்பு. அதன் பின்னர் காங்கிரஸில் சேர்ந்தார். அப்போது ஆளுங்கட்சியான பாஜக-வை கடுமையாக தாக்கி ட்விட்டரில் பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் காங்கிரஸில் இருந்து விலகி பாஜக-வில் இணைந்துக் கொண்டார். தற்போது இவர் பாஜக செயற்குழு உறுப்பினராக இருக்கிறார். மேலும், குஷ்பு எப்போதும் சமூகம் சார்ந்த பல விஷயங்களுக்கு குரல் கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் குஷ்பு தன்னுடைய அம்மாவின் பிறந்த நாளை முன்னிட்டு ட்விட்டரில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

குஷ்பூ போட்ட டீவ்ட்:

அதில் அவர் கூறியிருப்பது, அம்மா! உண்மையாகவே கடவுள் அனுப்பியது. எல்லாம் மாற்ற தக்கது. ஆனால், ஒரு தாய்? நான் சந்தித்ததில் மிக அழகான பெண் என் அம்மா. இன்று அவர் தனது 78வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அன்பு, கருணை, மனிதாபிமானம் உள்ளிட்டவற்றை எனக்கு வழங்கிய தூதரை அனுப்பியதற்கு அல்லாஹ்வுக்கு நன்றி கூறுகிறேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மி! என்று குஷ்பு தன்னுடைய அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார். தற்போது குஷ்புவின் போஸ்ட் சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் லைக்ஸ்க்குகளை குவித்து வருகிறார்கள்.

Advertisement