தமிழ் சினிமாவில் விக்ரம் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ‘ஜெமினி’ படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து பிரபலமடைந்தவர் நடிகை கிரண். அதன் பின்னர் அஜித்தின் ‘வில்லன்’, கமலஹாசனின் ‘அன்பே சிவம்’ போன்ற படங்களில் நடித்து வந்தார். அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்து வந்த இவருக்கு கவர்ச்சி நாயகியாக அங்கிகாரம் கிடைத்தது என்னவோ பிரசாந்த் நடிப்பில் வெளியான ‘வின்னர்’ படத்தில் தான். அந்த படத்தில் இடம்பெற்ற பாடலில் பிகினி உடையில் தோன்றி ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஷாக் கொடுத்தார் நடிகை கிரண்.
ஆனால் அந்தப் படத்திற்கு பின்னர் அம்மணிக்கு எதிர்பார்த்தபடி வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். தமிழில் ஒரு சிலகாலம் காணாமல் போன கிரண் கடந்த 2015 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான ‘ஆம்பள’ திரைப்படத்தில் விஷாலின் அத்தையாக நடித்திருந்தார். இறுதியாக சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ‘முத்தின கத்திரிக்காய்’ படத்தில் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் தோன்றி இருந்தார் கிரண். அதற்கு பின்னர் அம்மணியை தமிழ் சினிமாவில் பார்க்கவே முடியவில்லை.
இதையும் பாருங்க : ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஒருத்தர் என்னை சென்னையில் இருக்காதீங்கன்னு சொன்னாங்க – ரம்யா கிருஷ்ணன்.
இருப்பினும் சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார் நடிகை கிரண். 38 வயது ஆனாலும் கவர்ச்சியில் சற்றும் குறையாத அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். அந்த வகையில் ரவுடி பேபி பாடலுக்கு நடிகை கிரண் மிகவும் கவர்ச்சியான ஆடை அணிந்து நடன அசைவுகளை செய்த வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோ மிகவும் வைரலாக பரவியது.
அதுமட்டுமில்லாமல் நடிகை கிரண் பதிவிடும் புகைப்படங்கள் அனைத்தும் கவர்ச்சியாக தான் இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் நடிகை கிரணின் சிகப்பு உடையில் உடல் தெரியும் அளவிற்கு சில கவர்ச்சியான செல்ஃபீ புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. தற்போது கிரனுக்கு 39 வயதாகிறது.ஆனால், இந்த வயதிலும் திருமணம் செய்துகொள்ளாத கிரண் தற்போதும் கவர்ச்சியில் இளம் நடிகைகளுக்கு டப் கொடுத்து வருகிறார்.