நீங்க மறுபடியும் நடிக்க வந்தா, எல்லா நடிகைகளையும் ஓரம் கட்டிடுவீங்க – கிரண் பதிவிட்ட புகைப்படத்தில் உருகும் ரசிகர்கள்.

0
89138
kiran
- Advertisement -

தமிழ் சினிமவில் 90ஸ் ரசிகர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்து வந்தவர் நடிகை கிரண். தமிழ் சினிமாவில் விக்ரம் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ‘ஜெமினி’ படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து பிரபலமடைந்தவர் நடிகை கிரண். அதன் பின்னர் அஜித்தின் ‘வில்லன்’, கமலஹாசனின் ‘அன்பே சிவம்’ போன்ற படங்களில் நடித்து வந்தார். அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்து வந்த இவருக்கு கவர்ச்சி நாயகியாக அங்கிகாரம் கிடைத்தது என்னவோ பிரசாந்த் நடிப்பில் வெளியான ‘வின்னர்’ படத்தில் தான்.

-விளம்பரம்-

அந்த படத்தில் இடம்பெற்ற பாடலில் பிகினி உடையில் தோன்றி ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஷாக் கொடுத்தார் நடிகை கிரண்.ஆனால் அந்தப் படத்திற்கு பின்னர் அம்மணிக்கு எதிர்பார்த்தபடி வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். தமிழில் ஒரு சிலகாலம் காணாமல் போன கிரண் கடந்த 2015 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான ‘ஆம்பள’ திரைப்படத்தில் விஷாலின் அத்தையாக நடித்திருந்தார்.

- Advertisement -

இறுதியாக சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ‘முத்தின கத்திரிக்காய்’ படத்தில் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் தோன்றி இருந்தார் கிரண். அதற்கு பின்னர் அம்மணியை தமிழ் சினிமாவில் பார்க்கவே முடியவில்லை.இருப்பினும் சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார் நடிகை கிரண். 38 வயது ஆனாலும் கவர்ச்சியில் சற்றும் குறையாத அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் இவர் கவர்ச்சியான போஸில் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். வழக்கம்போல இந்தப் புகைப்படத்தில் இருக்கும் ரசிகர்கள்லைக்ஸ்களை அள்ளி வீசி வந்தனர். மேலும் இந்த புகைப்படத்திற்கு கீழே ரசிகர் ஒருவர் நீங்கள் மீண்டும் சினிமாவில் வரவேண்டும் அப்படி வந்தால் தற்போது இருக்கும் நடிகைகள் அனைவரையும் ஓரங்கட்டி விடுவீர்கள் என்று கிரனை உசுப்பேத்தி இருக்கிறார். ஏற்கனவே நடிகை கிரண் இந்த ஆண்டு ஒளிபரப்பாக உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதாக ஒரு கிசுகிசு பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

-விளம்பரம்-
Advertisement