அந்த படத்துல ஏண்டா நடிச்சோம்னு இருக்கு – சுந்தர் சி படத்தில் நடித்தது குறித்து புலம்பிய கிரண்

0
421
- Advertisement -

தமிழ் சினிமாவில் விக்ரம் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ‘ஜெமினி’ படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து பிரபலமடைந்தவர் நடிகை கிரண். அதன் பின்னர் அஜித்தின் ‘வில்லன்’, கமலஹாசனின் ‘அன்பே சிவம்’ போன்ற படங்களில் நடித்து வந்தார். அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்து வந்த இவருக்கு கவர்ச்சி நாயகியாக அங்கிகாரம் கிடைத்தது என்னவோ பிரசாந்த் நடிப்பில் வெளியான ‘வின்னர்’ படத்தில் தான்.

-விளம்பரம்-

அந்த படத்தில் இடம்பெற்ற பாடலில் பிகினி உடையில் தோன்றி ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஷாக் கொடுத்தார் நடிகை கிரண். ஆனால் அந்தப் படத்திற்கு பின்னர் அம்மணிக்கு எதிர்பார்த்தபடி வாய்ப்பு கிடைக்கவில்லை.இதனால் திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். தமிழில் ஒரு சிலகாலம் காணாமல் போன கிரண் கடந்த 2015 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான ‘ஆம்பள’ திரைப்படத்தில் விஷாலின் அத்தையாக நடித்திருந்தார்.

- Advertisement -

இறுதியாக நடித்த படம் :

இறுதியாக சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ‘முத்தின கத்திரிக்காய்’ படத்தில் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் தோன்றி இருந்தார் கிரண். கடந்த சில காலமாகவே உடல் எடை கூடி படு பருமனாக மாறிவிட்டார். சமீப காலமாக உடல் எடையை குறைக்க முயற்ச்சி எடுத்து வருகிறார். ஆனால், தனது உடல் எடையை குறைக்க படாதபாடு பட்டு வருகிறார் கிரண்.

அவர் கூறிய தகவல்:

இது குறித்து போட்டியில் அவர் கூறிய போது “நான் தென்னிந்தியங்களில் பிரபலமானது இந்தியில் நடிக்க சென்று அங்கு எனக்கு பெரிதும் வரவேற்பு கிடைக்காததால் நான் மீண்டும் சென்னைக்கு திரும்பி வந்து விட்டேன். சினிமாவில் எனக்கு நிறைய கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டுள்ளது இதனால் மன அழுத்தம் ஏற்பட்டது. படத்தில் நடிக்க ஒப்பந்தம் போட்ட பிறகு அவர்களின் சுயரூபத்தை காட்டுகிறார்கள். இன்று இருவருக்கு வருவாய் என இல்லையா என்று என்னிடம் சர்வ சாதாரணமாக கேட்பார்கள்.

-விளம்பரம்-

ஏன் அந்த படத்தில் நடித்தோம்னு இருக்கு :

நான் அந்த இடத்தில் இருந்து உடனே வெளியேறிவிடுவேன். நடிப்பை விட்டு விட்டு ஏதாவது தொழில் செய்யலாம் என்றும் யோசித்து இருந்தேன்’ என்று கூறியுள்ளார். மேலும், இதுவரை நடித்த படங்களில், இந்த படத்தில் நடித்து இருக்க கூடாது என்று யோசித்தது உண்டா என்று ஷகீலா கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அவர் ‘ சுந்தர் சி அண்ணன் என்னுடைய அண்ணா போன்றவர் அதனால் எந்த கதாபாத்திரம் இருந்தாலும் கொடுங்கள் என்று நான் சொன்னேன்.

ஆம்பள படம் குறித்து கிரண் :

ஆனால், அந்த படத்தில் நான் ஏதோ செட் பிராப்பரிட்டியாக மாறிவிட்டேன் என்னால் அந்த படத்தில் எதுவும் செய்ய முடியவில்லை அந்த படம் ஏன் நடிக்கும் என்று இருக்கிறது ஆம்பள படத்தில் நான் நடித்து இருக்க கூடாது. அந்த படத்திற்கு பின்னர் நான் நல்ல படங்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்’ என்று கூறியுள்ளார் கிரண்.

Advertisement