சுந்தர் சி பேய் படங்களை எடுக்க காரணம் இது தான்- குஷ்பூ சொன்ன விஷயம்.

0
386
- Advertisement -

சுந்தர் சி பேய் படம் எடுக்க இது தான் காரணம் என்று அரண்மனை 4 ட்ரைலர் விழாவில் குஷ்பூ கூறி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குநராக வலம் வந்து நடிகராக கலக்கி கொண்டு இருப்பவர் சுந்தர்.சி. இவர் 1995-ஆம் ஆண்டு வெளி வந்த ‘முறை மாமன்’ என்ற படம் மூலம் தான் இயக்குனர் ஆனார். அதை தொடர்ந்து இவர் அடுத்தடுத்து தமிழில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். பின் இவர் தமிழ் திரையுலகில் இயக்குநர் என்பதுடன் தனது திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று ஹீரோவாகவும் அவதாரம் எடுத்தார்.

-விளம்பரம்-

அதனை பின் இவர் இயக்கி நடித்தும் வருகிறார். இவர் படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த படங்களில் அரண்மனை படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கி நடித்து வெளிவந்த அரண்மனை படத்தில் அன்ஷிகா, ஆண்ட்ரியா, வினய் போன்ற பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் சாதனையும் செய்திருந்தது.

- Advertisement -

அரண்மனை படங்கள்:

இதனைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு அரண்மனை படத்தின் இரண்டாம் பாகத்தை சுந்தர் சி எடுத்திருந்தார். இதில் சித்தார்த், திரிஷா, கோவை சரளா, சூரி, ஹன்சிகா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படமும் நல்ல வரவேற்பு பெற்றது. அதற்குப்பின் 2021 ஆம் ஆண்டு அரண்மனை படத்தின் மூன்றாம் பாகத்தை எடுத்தார். இதில் ஆர்யா, ராசி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால், விவேக் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த அளவிற்க்கு வெற்றி அடையவில்லை.

-விளம்பரம்-

அரண்மனை 4 :

இந்த அரண்மனை மூன்றாம் பாகத்தின் மூலம் நெட்டிஷன்கள் பலரும் சுந்தர்சியை மோசமாக விமர்சித்தும், கிண்டல் கேலியும் செய்திருந்தார்கள். இதற்கு காரணம் அரண்மனை பேய் என்ற ஒரே கான்செப்ட்டையே வைத்து மூன்று பாகங்களாக சுந்தர் சி கொடுத்தது தான் என்று கூறப்படுகிறது. இருந்தாலும், மனம் திரளாமல் தற்போது சுந்தர் சி அவர்கள் அரண்மனை நான்காம் பாகத்தை இயக்கியிருக்கிறார். இதில் சுந்தர் சி, தமன்னா, ராசி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, சிங்கம் புலி, விடிவி கணேஷ், ஜே பி விச்சு, கே ஜி எஃப் ராம், சேசு, சந்தோஷ் பிரதாப், மொட்டை ராஜேந்திரன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

அரண்மனை 4 ட்ரைலர் விழா:

இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை Avni Cinemax சார்பில் குஷ்பு சுந்தர் மற்றும் Benz Media PVT LTD சார்பில் A.C.S அருண்குமார் தயாரித்து இருக்கிறார்கள். மேலும், இந்த படத்தினுடைய ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. இதுவரை வந்த மூன்று பாகங்களை விட இந்த படத்தை கொஞ்சம் வித்தியாசமாக இயக்குனர் எடுத்திருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தினுடைய ட்ரெய்லர் விழா நடைபெற்றிருக்கிறது. அதில் அரண்மனை 4 படத்தின் பட குழுவினர் பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
அப்போது விழாவில் நடிகை குஷ்பூ, இந்த படம் நான்கு பாகங்கள் வரை வந்ததற்கு முக்கிய காரணம் சுந்தர் சி தான்.

விழாவில் குஷ்பூ சொன்னது:

அவருடன் நான் 30 வருடங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு படத்திலிமே எப்படி வித்தியாசமாக ரசிகர்களை மகிழ்விக்கலாம் என்று எப்போதுமே யோசித்துக் கொண்டிருப்பார். வீட்டில் இருக்கும் எங்களுடைய இரண்டு குழந்தைகளுக்குமே ஹாரர் படம் என்றால் ரொம்ப பிடிக்கும். அதனால் தான் அவர் அந்த ஜெனரிலில் தொடர்ந்து படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். அரண்மனை படத்தை பார்க்க சாப்பாடு கட்டி எடுத்து வந்து திரையரங்கில் எல்லாம் ரசிகர்கள் குடும்பத்தோடு பார்த்திருக்கிறார்கள். அவர்களுடைய வெற்றி தான் இந்த இடத்தில் நாங்கள் இருப்பதற்கு காரணம். தற்போது எங்களுக்கு இந்த நான்காம் பாகத்தை எடுக்க உறுதுணையாக இருந்த தயாரிப்பாளருக்கும், படத்தில் நடித்த கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அரண்மனை 3 பாகங்களை விட இந்தப் படம் இன்னும் அட்டகாசமாக இருக்கும் என்று கூறி இருக்கிறார்.

Advertisement