புது சீரியலில் நடிகை குஷ்பூ கமிட்டாகி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமா திரை உலகில் உள்ள முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் குஷ்பூ. இவர் திரைப்பட நடிகை மட்டுமல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். இவர் சினிமா திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக தான் முதலில் அறிமுகமாகி இருந்தார். அதன் பின் 1989 ஆம் ஆண்டு ‘வருஷம் 16’ என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
அதன் பின் இவர் தமிழ் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாகவும் விளங்கி இருந்தார். மேலும், சினிமா உலகில் 90 களின் காலகட்டத்தில் இளைஞர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்தவர் குஷ்பு. அதோடு ரசிகர்கள் குஷ்பு மீது உள்ள பற்றின் காரணமாக அவருக்கு கோவில் ஒன்று கட்டி உள்ளார்கள். பின் இவர் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.
குஷ்பூ திரைப்பயணம்:
பின் வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களிளும், சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். இதனிடையே குஷ்பு கடந்த 2000ஆம் ஆண்டு பிரபலமான இயக்குனர் சுந்தர்.சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரு மகள்கள் இருக்கிறார்கள். தற்போது அவர்களுடைய இரண்டு மகள்களும் படித்து முடித்து விட்டு தங்களுடைய வேலையில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
குஷ்பூ அரசியல்:
மேலும், குஷ்பூ அவர்கள் நடிப்பு மீது கவனம் செலுத்தி வந்தாலும், அரசியலிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது இவர் பாஜகவில் முக்கிய பொறுப்பை வகித்து வருகிறார். அதோடு இவர் தேசிய மகளிர் ஆணையத்திலும் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். இவர் எப்போதுமே சோசியல் மீடியாவிலும் படு ஆக்டிவாக இருக்கிறார். சமூக பிரச்சனை எதுவாக இருந்தாலும் குரல் கொடுத்து வருகிறார்.
குஷ்பூ சின்னத்திரை:
அதேசமயம் இவர் படங்களில் பிசியாக நடித்தும் வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் நடிகை குஷ்பூ புது சீரியலில் கமிட்டாகி இருக்கும் தகவல் தான் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது, இவர் 1995 ஆம் ஆண்டு சின்ன சின்ன உறவு என்ற சன் டிவி சீரியல் தான் முதன் முதலாக சின்னத்திரையில் அறிமுகம் ஆகியிருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல சேனல்களில் ஒளிபரப்பாகி சீரியல்களில் நடித்தி இருக்கிறார். அதோடு இவர் தொகுப்பாளராகவும் பணியாற்றி இருந்தார்.
குஷ்பூ நடிக்கும் சீரியல்:
கடைசியாக இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி இருந்த மீரா என்ற தொடரில் நடித்திருந்தார். தற்போது இவர் டிடி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் புது சீரியலில் கமிட்டாகி இருக்கிறார். இவர் நடிக்கும் சீரியலுக்கு ‘சரோஜினி’ என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் தான் இந்த சீரியலுடைய பூஜையும் நடந்தது. தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.