பிரபல நடிகரின் பேரனை நடிகை மதுவந்தி காதலித்து திருமணம் செய்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது . சமீப காலமாக சோசியல் மீடியாவில் சர்ச்சை நாயகியாக வலம் வருபவர் மதுவந்தி. இந்த பெயரை சோசியல் மீடியா மீம் கிரியேட்டர்கள் அவ்வளவு எளிதில் மறக்க மாட்டார்கள். தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருந்தவர் ஒய்.ஜி. மகேந்திரன். இவரின் மகள் தான் மதுவந்தி.
மேலும், 2016-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘தர்மதுரை’. இந்த படத்தினை பிரபல இயக்குநர் சீனு ராமசாமி இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடித்திருந்தார். இந்த படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகளும், நடிகையுமான மதுவந்தி. இது தான் நடிகை மதுவந்தி அறிமுகமான முதல் தமிழ் திரைப்படமாம்.
மதுவந்தி திரைப்பயணம்:
இதில் இவர் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் வலம் வந்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து ஆர்யாவின் ‘கடம்பன்’ மற்றும் ராகவா லாரன்ஸின் ‘சிவலிங்கா’ ஆகிய இரண்டு படங்களிலும் நடித்தார் நடிகை மதுவந்தி. அதன் பிறகு வெள்ளித் திரையுடன் தனது பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த நடிகை மதுவந்தி, சின்னத் திரையிலும் நுழையலாம் என்று முடிவெடுத்தார்.
மதுவந்தி நடித்த சீரியல்கள்:
பின் சன் டிவியில் சில ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த ‘வாணி ராணி’ தொடரிலும் மதுவந்தி நடித்தார். அதன் பின் சில சீரியலில் நடித்தார். இருந்தாலும் மதுவந்தியை பலரும் அறிந்தது 2020ஆம் ஆண்டு லாக் டவுனின் போது தான். அந்த சமயத்தில் மதுவந்தி இந்தியாவில் 8,000 கோடி மக்களுக்கு 5000 கோடியை அவர்களது கோடி கணக்கில் உஜ்ஜவாலா திட்டத்தின் கீல் மோடி செலுத்தி இருப்பதாக தெரிவித்து இருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவ மதுவந்தி மீம் மெட்டீரியல் ஆனார்.
மதுவந்தி காதல் கதை:
அதை தொடர்ந்து அடிக்கடி பல முறை இவர் மீம் மெட்டீரியலாக இருந்து வருகிறார். பின் கடந்த ஆண்டு இவர் வங்கியில் சரியாக தவணை செலுத்தவில்லை என்று வீட்டை சீல் வைத்து பூட்டு போட்டது பரபரப்பாக பேசப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மதுவந்தி காதலித்த நபர் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அதாவது, மறைந்த பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசன்-சாவித்திரியின் மகள் விஜயா சாமுண்டீஸ்வரி.
மதுவந்தி கணவர் புகைப்படம்:
இவருடைய மகன் தான் அருண். இவரை தான் மதுவந்தி காதலித்து திருமணம் செய்து இருக்கிறார். ஆனால், இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள். இவர்களுக்கு ரித்விக் என்ற ஒரு மகன் இருக்கிறார். தற்போது மதுவந்தி தன்னுடைய மகனுடன் தான் தனியாக வசித்து வருகிறார். மேலும், பலருக்கும் மதுவந்தி கணவன் யார்? என்று தெரியவில்லை. தற்போது மதுவந்தியின் கணவர் குறித்த புகைப்படம் தான் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.