கேன்சரில் இருந்து மீண்ட நிலையில் தற்போது அறிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை.

0
516
- Advertisement -

கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான ‘மாயோகம்’ என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் நடிகை மம்தா மோகன் தாஸ். அதன் பின்னர் பல்வேறு மலையாள படங்களில் நடித்து வந்த இவர் தமிழில் விஷால் நடிப்பில் வெளியான ‘சிவப்பதிகாரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் கால் பதித்தார்.

-விளம்பரம்-

அதன் பின்னர் தமிழில் குசேலன், தடையற தாக்க, குரு என் ஆளு போன்ற படங்களில் நடித்துள்ளார். நடிப்பையும் தாண்டி இவர் மலையாளம் மற்றும் தமிழில் பல பின்னணி பாடல்களை பாடியுள்ளார். தமிழில் சிம்பு நடித்த காளை படத்தில் ‘காள காள’ பாடலையும் விஜய் நடித்த வில்லு படத்தில் ‘டாடி மம்மி’ பாடலையும் இவர் தான் பாடினார்.

- Advertisement -

திருமணம் :

தமிழில் இவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவிக்ரு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் மலையாளத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார். மேலும், இவருக்கு 2011 ஆம் ஆண்டு ப்ரஜித் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், இவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர் என்பதால் இவரை விவாகரத்து செய்துவிட்டார்.

கேன்சரில் இருந்து மீண்ட மம்தா :

ஆம், மம்தா மோகன் தாஸ் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர் தான். கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் கேன்சர் நோய் காரணமாக சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் #10yearschalange சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வர மம்தா மோகன் தாஸ் கடந்த 10 வருடங்களுக்கு முன் கேன்சரால் பாதிப்பட்டு எதிர்கால கனவுகளை இழந்து, பின் நம்பிக்கையுடன் போராடி தற்போது அதிலிருந்து மீண்டுள்ளதாக கூறி மொட்டை தலையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில் மீண்டும் ஒரு அறிய வகை நோய் இவரை தாக்கியுள்ளது.

-விளம்பரம்-

மீண்டும் தாக்கிய அரியவகை நோய் :

நடிகை மம்தா மோகன் தாஸ் சமீபத்தில் போட்டிருந்த இன்ஸ்டா பதிவு எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே கேன்சர் நோயில் இருந்து மீண்ட மம்தாவிற்கிற்கு 38 வயதாகும் நிலையில் அவர் தோல் நிறமி இழத்தல் என்ற அறிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் நடிகை மம்தா மோகன் தாஸ்.

உருக்கமான பதிவு :

அந்த பதிவில் `அன்பு சூரியனே நான் முன்பு எப்போதும் இல்லாதது போல் இப்போது உன்னை அணைத்துக்கொள்கிறேன். அதனால் கண்டுபிடிக்கப்பட்டது, நான் நிறத்தை இழக்கிறேன்… உங்கள் முதல் கதிரை மூடுபனி வழியாக ஒளிர்வதைக் காண நான் தினமும் காலையில் உங்கள் முன் எழுகிறேன். உன்னிடம் உள்ள அனைத்தையும் கொடு.. ஏனெனில், உனது அருளால் இங்கும் என்றென்றும் நான் கடன்பட்டவனாக இருப்பேன். என்று உருக்கமான ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் நடிகை மம்தா மோகன் தாஸ்.

Advertisement