நடிகை மீரா வாசுதேவன் மும்பையில் ஒரு தமிழ் குடும்பத்தில் 1982ஆம் ஆண்டு பிறந்தவர். தனது 21 வயதில் உன்னை சரணடைந்தேன் என்ற தமிழ் படத்தில் அறிமுகம் ஆனார். ஜெர்ரி, கத்தி கப்பல், போன்ற தமிழ் படங்களில் நடித்தார்.
தற்போது இரண்டு திருமணம் ஆகி முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது கணவருடன் வாழ பிடிக்காமல் தன் மகள் அரிஹாவை தன்னுடன் வைத்துக்கொண்டு தனியாக வாழ்ந்து வருகிறார் மீரா.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மீரா அடிக்கடி ஏதாவது ஒரு புகைப்படத்தை பதிவிடுவார். இதனால் ஒரு குறிப்பிட்ட இளைஞர் ஒருவர் அவரது புகைப்படங்களுக்கு எல்லாம் வந்து ஆபாசமாக கருத்துக்களை பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பதில் அளித்துள்ளார் மீரா.
இப்படி அவர் கமெண்ட் அடித்தால் அவருக்கு என்ன கிடைத்துவிட போகிறது. அதற்கு அந்த நபர் வெட்கப்பட வேண்டும். இவையெல்லாம் தேவையில்லாத ஒன்று.
கமண்ட் அடித்து இங்கு நேரத்தை வீண் செய்வதற்கு பதில் அவர், அவருடைய குடும்பத்துடன் நேரத்தை செலவு செய்யலாம், என அன்பான பதிலடி கொடுத்துள்ளார் மீரா.