அன்று நக்‌ஷத்ராவின் கணவர் பற்றி எல்லாம் பேசிவிட்டு இன்று அவரின் வளைகாப்புக்கு சென்று நலங்கு வைத்த ஸ்ரீநிதி. நக்‌ஷத்ராவின் Reaction

0
462
Sreenidhi
- Advertisement -

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சீரியல் நடிகை நக்ஷத்ராவின் திருமண விவகாரத்தில் பல சர்ச்சைகளை கிளப்பி இருந்தார் அவரது நெருங்கிய தோழியும் சீரியல் நடிகையுமான ஸ்ரீநிதி. சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை நட்சத்திரா. ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த யாரடி நீ மோகினி என்ற சீரியலில் வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் நட்சத்திரா நடித்திருந்தார். இந்த சீரியலின் மூலம் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. அந்த அளவிற்கு அவருடைய கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பேசப்பட்டது.

-விளம்பரம்-

இதனைத் தொடர்ந்து இவருக்கு பல சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. தற்போது இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் வள்ளி திருமணம் என்ற தொடரில் லீட் ரோலில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த சீரியலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் நட்சத்திராவுக்கும், விஸ்வா என்பவருக்கும் திடீர் திருமணம் நடைபெற்றது.

- Advertisement -

இது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. இவர்களின் திடீர் திருமணத்திற்கு காரணம், நட்சத்திராவின் தாத்தா உடல் நிலை மிக மோசமாக இருந்ததால் தான் அவசர அவசரமாக இவர்களுடைய திருமணம் நடந்திருந்தது.ஆனால், நட்சத்திராவின் தோழி ஸ்ரீநிதி நட்சத்திரா ஆபத்தில் இருப்பதாகவும், அவரை காப்பாற்றுங்கள் என்றெல்லாம் சோசியல் மீடியாவில் பல சர்ச்சை கிளப்பியிருந்தார். அதற்கு நட்சத்திராவும் பதில் கொடுத்திருந்தார். இருந்தும் ஸ்ரீநிதி, நட்சத்திரா குறித்தும், அவருடைய கணவர் குறித்தும் அவதூறாக பல விஷயங்களை பேசியிருந்தார்.

இந்த நிலையில் நட்சத்திரா மற்றும் அவருடைய கணவர் விஷ்வா இருவரும் சேர்ந்து பேட்டி ஒன்று கொடுத்து இருந்தனர். அதில் அவர்கள் ஸ்ரீநிதி குறித்து கூறியிருந்தது, எங்களுடைய திருமணம் அவசர அவசரமாக நடந்தது உண்மைதான்.என்னுடைய தாத்தா உடல் நிலை மிகவும் மோசமாக இருந்தது. அவர் என்னுடைய திருமணத்தை இறப்பதற்கு முன் பார்க்க வேண்டும் என்று கேட்டிருந்தார். அதனால் தான் யாரிடமும் எந்த தகவலுமே சொல்ல முடியவில்லை.

-விளம்பரம்-

என்னுடைய நண்பர்கள் யாரிடமும் சொல்ல முடியவில்லை. ஆனால், ஸ்ரீநிதி அப்படி பேசியதற்கு காரணம் என்ன என்று தெரியவில்லை அவள் என்னை பற்றி எது பேசியிருந்தாலும் அதைப் பற்றி கவலை இல்லை.என்னுடைய கணவரையும் அவருடைய குடும்பத்தையும் பற்றியும் மிக தரக்குறைவாக பேசி இருந்தார். இருந்தாலும் என்னுடைய கணவரும் அவருடைய குடும்பமும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும் கூறி இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் தற்போது நக்ஷத்ரா கர்ப்பமாக இருக்கும் நிலையில் மன கசப்புகளை மறந்து மீண்டும் தனது தோழியுடன் சேர்ந்து உள்ளார். இந்த நிலையில் கர்ப்பமாக இருக்கும் நக்ஸத்தராவிற்கு எளிமையாக வளைகாப்பு நடைபெற்று இருக்கிறது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீநிதியும் கலந்துகொண்டு இருக்கிறார்.

Advertisement