தனது பழைய புடவைகளை இன்ஸ்டாவில் விற்கும் சேரன் பட நடிகை – ஒவ்வொரு புடவையின் விலை எவ்வளவு தெரியுமா? ரசிகர்கள் கமெண்ட்ஸ்

0
515
- Advertisement -

மலையாள நடிகை நவ்யா நாயர் ஆன்லைனில் சேலை விற்பனை செய்யும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகை நவ்யா நாயர். இவருடைய இயற்பெயர் தன்யா வீனா. இவர் திரைப்பட நடிகை மட்டும் இல்லாமல் ஒரு சிறந்த நடனக் கலைஞரும் ஆவார். இவர் முதன் முதலாக 2001 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த இஷ்டம் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் அறிமுகமானார்.

-விளம்பரம்-

அதன் பின் இவர் மலையாள சினிமாவில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வந்தார். மேலும், நவ்யா நாயர் அவர்கள் மலையாளம் மட்டும் இல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து இருக்கிறார். அதிலும் இவர் அழகிய தீயே என்ற படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமானர். இதனை தொடர்ந்து இவர் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பாசக் கிளிகள், மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

நவ்யா நாயர் குறித்த தகவல்:

அதற்கு பின் இவருக்கு தமிழில் சரியாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனிடையே இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு சந்தோஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சாய் கிருஷ்ணா என்ற ஒரு மகனும் உள்ளார். திருமணத்திற்கு பிறகு நடிகை நவ்யா நாயர் அவர்கள் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டார். அதன் பின் இவர் டிவி நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கு பெற்று வருகிறார்.

சோசியல் மீடியாவில் நவ்யா நாயர்:

அதோடு பல நடிகைகள் திருமணத்திற்கு பிறகு புகைப்படங்களை வெளியிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் பிரபல நடிகை நவ்யா நாயரும் அடிக்கடி தனது புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். அதிலும் இவர் நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் குளித்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பயங்கர சர்ச்சையாகி இருந்தது. இந்நிலையில் நடிகை நவ்யா நாயர் அவர்கள் சேலைகளை ஆன்லைனில் விற்பனை செய்யும் தகவல் வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

நவ்யா நாயர் புது தொழில்:

அதாவது, நவ்யா நாயர் இடம் ஆயிரக்கணக்கான சேலைகள் இருக்கிறதாம். அந்த சேலைகள் எல்லாம் ஒருமுறை அணிந்தும், சில சேலைகள் அணியாமலும் வைத்திருக்கிறார். இதனால் அவர் அந்த புடவைகள் எல்லாம் ஆன்லைனில் விற்பனை செய்ய முடிவு எடுத்து இருக்கிறார். ‘ஃப்ரீ லவ்டு பை நவ்யா நாயர்’ என்ற பெயரில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த விற்பனையை தொடங்கி இருக்கிறார். இதுவரை ஆறு சேலைகளை இவர் விற்பனை செய்து இருக்கிறார்.

சேலை விற்பனை:

அதில் நான்கு காஞ்சிபுரம் பட்டு சேலைகள், இரண்டு கைத்தறி சேலைகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கைத்தறி புடவைகள் விலை 2500, காஞ்சிபுரம் புடவரின் விலை 4000 முதல் 4600 வரை, பனாரஸ் புடவைகள் 4,500 ஆகிய ரேட்டில் விற்பனை செய்து வருகிறார். அது மட்டுமில்லாமல் முதலில் வாங்குபவர்களுக்கு முன்னுரிமை என்றும் கூறியிருக்கிறார். தற்போது இவருடைய ஆன்லைனில் விற்பனை குறித்த ஐடியா தான் சோசியல் மீடியாவில் வைலாகி வருகிறது. இதை சிலர் விமர்சித்தாலும் சிலருக்கு ஆதரவாக கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

Advertisement