20 நாள் ஷூட்டிங்க்கு நயன்தாரா கேட்ட சம்பளம். எத்தனை கோடின்னு தெரியுமா? அதிர்ச்சியில் கோலிவுட் வட்டாரம்

0
855
- Advertisement -

20 நாட்களுக்காக நடிகை நயன்தாரா தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடனும், ரசிகர்களின் கனவு கன்னியாகவும் திகழ்பவர் நயன்தாரா. இவர் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல் படங்களை தயாரித்தும் வருகிறார். இவர் ஐயா என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்திருக்கிறார். இடையில் இவருடைய படங்கள் தோல்வியடைந்திருந்தாலும் ராஜா ராணி படத்தின் மூலம் நயன்தாரா ரீ என்ட்ரி கொடுத்து ஒட்டு மொத்த திரை உலகையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.

-விளம்பரம்-
nayanthara

அதனை தொடர்ந்து இவர் நண்பேன்டா, விசுவாசம், பிகில் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். அதிலும் சமீப காலமாகவே இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதனால் இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று வருகின்றது. அதுமட்டும் இல்லாமல் நாட்கள் செல்ல செல்ல இவருடைய ரசிகர்கள் கூட்டமும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம்.

- Advertisement -

நயன்தாராவின் திரைப்பயணம்:

அந்த அளவிற்கு சினிமாவின் உச்ச நடிகையாக நயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக நயன் திகழ்கிறார். மேலும், இவர் தன் காதலன் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து பல படங்களை தயாரித்து வருகிறார். அதோடு நயன்தாரா பிசினஸ்வுமனாகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். சமீபத்தில் ரஜினியின் நடிப்பில் வெளிவந்த அண்ணாத்தா படத்தில் நயன்தாரா ரஜினிக்கு ஜோடியாக நடித்து இருந்தார். இதனை தொடர்ந்து தற்போது பல படங்களில் கமிட்டாகி நயன் பிசியாக நடித்து கொண்டிருக்கிறார்.

nayanthara

காத்துவாக்குல 2 காதல் படம்:

தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் காத்துவாக்குல 2 காதல் என்ற படத்தில் நயன் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் விஜய்சேதுபதி, சமந்தா உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.
மேலும், விக்னேஷ் சிவன் மற்றும் லலித்குமார் இருவரும் இணைந்து இந்த படத்தை தயாரித்து இருக்கிறார்கள். இந்த படம் முழுக்க முழுக்க ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகி உள்ளது. சமீபத்தில் தான் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி இருந்தது. இந்த படத்தின் ரிலீசுக்கு ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கின்றனர்.

-விளம்பரம்-

நயன்தாரா நடிக்கும் படங்கள்:

இதனை தொடர்ந்து நயன் அவர்கள் அஸ்வின் சரவணன் இயக்கும் கனெக்ட், மலையாளத்தில் அஸ்வின் புத்திரன் இயக்கும் கோல்ட், தெலுங்கில் மோகன் ராஜா இயக்கும் காட்பாதர் போன்ற பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதுதவிர இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விக்னேஷ் என்பவர் இயக்கும் O2 என்ற படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். அதோடு இவர் பாலிவுட்டிலும் அறிமுகமாக இருக்கிறார். அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார்.

nayanthara

நயன்தாரா சம்பளம் பற்றிய தகவல்:

இந்த சூழ்நிலையில் நயன் தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது நயன்தாரா தன்னுடைய சம்பளத்தை 3 கோடியில் இருந்து 5 கோடி ரூபாயாக உயர்த்தி இருக்கிறார். அதோடு அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்க இருக்கும் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த படத்துக்காக இவர் தன்னுடைய சம்பளத்தை 5 கோடி ரூபாயிலிருந்து 10 கோடி ரூபாயாக உயர்த்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்த படத்தில் நயன்தாரா 20 நாட்கள் தான் கால்ஷீட் கொடுத்திருக்கிறார் என்று கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Advertisement