என் சாவுக்கு இவர் தான் காரணம்..! நடிகை நிலானி பரபரப்பு வாக்குமூலம்.! வெளியான வீடியோ

0
835
nilaani
- Advertisement -

கடந்த இரண்டு நாட்களாக சீரியல் நடிகை நிலானி என்பவரால் உதவி இயக்குனராக இருந்த காந்தி லலித்குமார் என்பவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 3 வருடங்களாக பழகி வந்த நிலானி, தன்னை திருமணம் செய்ய மறுத்ததால் காந்தி லலித்குமார் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

-விளம்பரம்-

- Advertisement -

காந்தி லலித்குமார் தற்கொலை செய்வதற்கு முன்பாக அவர் மீது போலீசில் புகார் அளித்திருந்த நிலானி, காந்தி லலித்குமார் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு தகராறு செய்து மிரட்டுகிறார் என்று புகார் அளித்திருந்தார். ஆனால், காந்தி லலித்குமாரின் தற்கொலைக்கு பின்னரே நிலானிக்கும், காந்தி லலித்குமாருக்கும் தொடர்பு இருந்திருக்கிறது என்று சமீபத்தில் வெளியான சில புகைப்படங்கள் மூலம் தெரியவந்தது.

காந்தி லலித்குமாரின், தற்கொலையை பற்றி விசாரிக்க சென்னை வளசரவாக்கத்திலுள்ள நிலானியின் வீட்டிற்கு இன்று போலீசார் சென்றுள்ளனர். ஆனால், அங்கு நிலானி இல்லை, அவரது வீட்டில் இரண்டு குழந்தைகள் மட்டுமே இருந்துள்ளனர். பின்னர் அங்கிருந்தவர்களிடம் விசாரித்ததில் நடிகை நிலானிக்கு ஏற்கணமே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது.

-விளம்பரம்-

Nilani

ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரது பழக்கமும் திருமணம் வரை சென்றுள்ளது. ஆனால், சில பல காரணத்தால் நிலானி, காந்தி லலித்குமாரிடம் இருந்து சற்று ஒதுங்கி இருக்கிறார். இதனால் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி காந்தி லலித்குமார் தொல்லை செய்வதாக போலீசில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை காந்தி லலித்குமார் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், பின்னர் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.இந்த சம்பவத்தையடுத்து காவல் துறையினர் நிலானி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளது. இதில் முதற்கட்ட விசாரணையில் சீரியல் நடிகை நிலானி ஏற்கனவே திருமணமானவர் என்று திடுக்கிடும் தகவல் தெரியவந்துளளது.

Advertisement