அஜித்கு ஜோடியா நடிக்க போட்டோ அனுப்பிச்ச, ஆனால் நேர்ல பாக்க சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டாங்க.

0
12443
ajith
- Advertisement -

அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகி இருந்த இந்த படத்தில் அஜித் அருண்விஜய் த்ரிஷா, அனுஷ்கா ஷெட்டி, பார்வதி நாயர் ,விவேக் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தார்கள். இதில் பார்வதி நாயர் மட்டும் தமிழ் சினிமாவிற்கு புதுமுகமாக அறிமுகமாகி இருந்தார். தனது முதல் படத்திலேயே அஜித் பணத்தில் நடித்த அதிர்ஷ்டம் இவருக்கு கிடைத்திருந்தது. அதேபோல இந்த படத்தின் மூலம்தான் அருண் விஜய்க்கு ஒரு மாபெரும் திருப்பு முனையாக அமைந்து இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Parvathy

என்னை அறிந்தால் படத்திற்கு முன்பாகவே தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘நிமிர்ந்து நில் ‘ படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் கால் பதித்தார் பார்வதி நாயர். இவர் என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்யின் மனைவியாக நடித்திருந்தார். கேரளாவை சேர்ந்த இவர் சமீபத்தில் பாபி சிம்ஹா நடிப்பில் வெளிவந்த ஒரு வெப் சீரிஸிலும் நடித்திருந்தார். தமிழ் மட்டுமல்லாது மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிலும் நடித்து வருகிறார்.

- Advertisement -

என்னை அறிந்தால் படத்திற்கு பின்னர் இவர் உத்தமவில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர், வெள்ள ராஜா போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் வைபவ் நடித்துவரும் ஆலம்பனா என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை பார்வதி நாயர் என்னை அறிந்தால் படத்தில் வாய்ப்பு எப்படி வந்தது என்றும் பின்னர் அது எப்படி மாறியது என்றும் கூறியுள்ளார்.

வீடியோவில் 2 : 35 நிமிடத்தில் பார்க்கவும்

-விளம்பரம்-

இது குறித்து பேசிய அவர், என்னை அறிந்தால் திரிஷா நடித்திருந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க முதலில் ஒரு புது முகத்தை தான் தேடினார்கள். அதற்காக ஒரு புடவை அணிந்த புகைப்படம் ஒன்றை கூட அனுப்பி இருந்தேன். கௌதம் மேனன் மற்றும் அஜித் படம் என்றவுடன் அதை மிஸ் செய்யக்கூடாது என்று நான் நேரில் சென்று பார்த்தேன். ஆனால், என்னை நேரில் பார்த்தவுடன் நான் சின்ன பெண்ணாக தெரிந்தேன் என்று பின்னர் அந்த கதாபாத்திரத்தை கொடுத்தார்கள்.

Advertisement