நடிகை பூஜா 1984ஆம் ஆண்டு இலங்கையில் உள்ள கொழும்புவில் பிறந்தவர். இவருடைய முழு பெயர் பூஜா உமாசங்கர் வேதகன். இதில் விசேஷம் என்னவென்றால், இவரது அப்பா ஒரு கன்னடர், அம்மா ஒரு சிங்களர், கணவர் ஒரு தமிழர். தனது பள்ளிப்படிப்பை கொழும்புவில் முடித்த பூஜா கல்லூரி படிப்பிற்காக பெங்களூர் வந்தார்.
அங்கு மவுண்ட் கார்மல் காலேஜில் பி.காம் படித்தார். அதன்பின்னர் வால்பாறையில் உள்ள ஹிந்துஸ்தான் யூனிலீவர் கம்பெனியில் மேனேஜராக வேலை செய்து வந்தார். அப்போது அவருடைய நண்பர் இயக்குனர் ஜீவா பூஜாவிற்கு படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கினார். மேலும், 2003ஆம் ஆண்டு ஜெய் ஜெய் என்ற படத்தில் நடித்தார் பூஜா.
அதன்பின்னர் பல ஹிட்டான தமிழ் படங்களில் நடித்தார் பூஜா. அஜித்துடன் அட்டகாசம், உள்ளம் கேட்க்குமே, ஜித்தன், பட்டியல், தம்பி, ஓரம் போ, நான் கடவுள் என பல ஹிட் படங்களில் நடித்தார். நான் கடவுள் படத்தில் இவரது சிறப்பான நடிப்பிற்காக பிலிம்பேர் விருது கிடைத்தது.
கடைசியாக 2015ஆம் ஆண்டு கடவுள்பாதி மிருகம்பாதி என்ற தமிழ் படத்தில் நடித்தார். கடந்த 2014ஆம் ஆண்டு பூஜாவிற்கும் இலங்கை மாடல் தீபக் சண்முகநாதன் என்பவருக்கும் திருமண நிச்சயம் நடைபெற்றது.
கடைசியில் இருவருக்கும் பிடிக்காமல் திருமணம் நின்றது. அதன்பின்னர், 2016ஆம் ஆண்டு பிரசான் டேவிட் வேதகன் என்னும் இலங்கை தமிழ் பிஸ்னஸ்மேனுடன் திருமணம் நடைபெற்றது.
தற்போது தமிழில் பட வாய்ப்புகள் இல்லாமல் சிங்கள மொழியில் நடித்து வருகிறார் பூஜா. கடைசியாக பத்தினி என்ற சிங்கள மொழி படத்தில் நடித்தார். இது ‘கண்ணகியின்’ வாழ்க்கை வரலாற்று படமாகும்