இந்திய திரைப்படங்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பூஜா குமார். இவர் இந்தோ-அமெரிக்க நடிகை ஆவார். இவர் தமிழில் நடிப்பதற்கு முன்னாடி நிறைய ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். நடிகை பூஜா குமார் இருபது ஆண்டுகளுக்கு மேலாக இந்திய திரைப்படத்துறையில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் இவர் மிஸ் இந்தியா யுஎஸ்ஏ என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார். இவர் முதன் முதலாக 2000 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் ரோஜாவே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.
மேலும், இவர் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த விஸ்வரூபம் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டார். அதனைத் தொடர்ந்து இவர் விஸ்வரூபம்-2, உத்தமவில்லன் போன்ற படங்களில் கமலஹாசனுடன் இணைந்து நடித்துள்ளார். இந்த படத்திற்கு பிறகு இவருக்கும் கமல்ஹாசனுக்கும் இடையே இருக்கும் உறவு குறித்து சோசியல் மீடியாவில் பல வதந்திகளும் சர்ச்சைகளும் எழுந்தன.
மேலும் பூஜா குமாருக்கு ஜாய் என்கிற திருமண ஏற்பாடுகளை செய்யும் கார்ப்பரேட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருக்கும் விஷால் ஜோஷி என்பவருக்கும் திருமணமான செய்தி ரகசியமாகவே காக்கப்பட்டு வந்தது.ஆனால், பூஜா குமார் சமூக வலைதளங்களில் இருந்தாலும் இது பற்றி அவர் பகிர்ந்ததில்லை.
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் தனக்கு குழந்தையே பிறந்து விட்டது என்று தன் கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்தார். இந்த நிலையில் பூஜா குமார், படு கவர்ச்சியான புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அரை ட்ராயரில் பட்டன் போடாமல், உள்ளாடை தெரியும் அளவிற்கு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.