கடந்த நான்கு, ஐந்து மாதங்களாக இந்த கரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் காட்டுத் தீயை விட வேகமாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனாவை எதிர்த்து போலீசார், மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள் என அனைவரும் தங்களுடைய உயிரை பணயம் வைத்து இரவு, பகல் என்று பாராமல் மக்கள் உயிரை காப்பாற்ற போராடி வருகிறார்கள். கொரோனா பரவலை தடுக்க பிரதமர் மோடி அவர்கள் ஊரடங்கு உத்தரவை மே 3 ஆம் தேதி வரை நீட்டித்து உள்ளார். மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் தான் வெளியில் வர வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
இதுவரை இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27000 நெருங்கியது மற்றும் 826 பேர் பலியாகியும் உள்ளனர். அதே போல் தமிழ்நாட்டில் தற்போது கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1821 ஆக உயர்ந்து உள்ளது. ஊரடங்கு உத்தரவினால் போக்குவரத்து, கடைகள், மக்களின் பொழுதுபோக்கு இடங்கள், மது கடைகள் என அனைத்தும் மூடப்பட்டு உள்ளது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டு நாடு முழுவதும் உணவு தட்டுப்பாடு சூழல் ஏற்பட்டு உள்ளது. கொரோனவினால் ஏழை மக்கள், ஆதரவற்றோர், கூலி வேலை செய்பவர்கள் என பலர் தங்களின் வாழ்வாதரத்திற்காக கஷ்டப்பட்டு வருகிறார்கள். இவர்களுக்கு மத்திய,மாநில அரசு,சினிமா பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் என பல பேர் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் பிரபலமான நடிகை பிரணிதா அவர்கள் பசியால் வாடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு உணவு சமைத்து வழங்கியுள்ளார். தற்போது இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக வருகிறது. இந்த லாக் டவுன் நேரத்தில் பல நடிகைகள் உடற்பயிற்சி செய்வது, புத்தகங்கள் படிப்பது, சமையல் செய்வது போன்ற வேலைகளை செய்து இருந்தாலும் சில நடிகைகள் மட்டும் தான் முன்வந்து மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகை பிரணிதா அவர்கள் கடந்த 21 நாட்களாக தினமும் பசியால் வாடிக் கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு உணவு சமைத்துக் கொடுத்து வருகிறார். நடிகை பிரணிதா அவரின் செயல் மிகவும் பாராட்ட கூடிய வகையில் உள்ளது. கொரோனா பாதிப்பால் உணவின்றி தவித்து வரும் ஏழை மக்களுக்கு இதுவரை பிரணிதா அவர்கள் 75 ஆயிரம் உணவு பொட்டலங்களை வழங்கியுள்ளார். இவரின் இந்த செயல் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
இதனை பார்த்து மக்கள் அவருக்கு வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்து வருகிறார்கள். உதயன் படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானவர் நடிகை பிரணிதா. பின் இவர் சகுனி, மாசு, எனக்கு வாய்த்த அடிமைகள் என சில படங்களில் நடித்து இருந்தார். பிறகு இவருக்கு தமிழில் சரியான வாய்ப்புகள் அமையாததால் பிற மொழிகளுக்கு சென்றார். இவர் தற்போது கன்னட மொழியில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.