நடிகை பிரியமைனியை நாம் அனைவரும் எளிதில் மறக்க வாய்பிள்ளை. அவர் பருத்தி வீரன் படத்தில் நடித்த முத்தழகு கதாபாத்திரத்தை யும் நாம் யாராலும் மறக்க முடியாது. அந்த கதா பாத்திரத்தில் நடித்ததர் காக அவருக்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது.ஆனால் ஒரு தேசிய விருது பெற்ற ஒரு நடிகை தற்போது என்னவானார் என்று கூட தெரியவில்லை.
1984 ஜூன் 4ஆம் தேதி பெங்களூரில் பிறந்த ப்ரியாமணியின் அப்பா ஒரு வங்கி மேலாளர் ,அவரது தாய் ஒரு புகழ் பெற்ற கர்நாடிக் பாடகர்.
பெங்களூரில்.ப்ரியாமணி சிறு வயது முதலே நடிப்பின் மீது முகுந்த2 ஆர்வம் கொண்டவர் .இதனால் இவர் 12 ஆம் வகுப்பு படிக்கும் போதே காஞ்சிபுரம் சில்க்ஸ் ,ஈரோடு சில்க்ஸ்,லட்சுமி சில்க்ஸ் போன்ற புடவை விளம்பரத்தில் நடித்திருக்கிறார்.தனது படிப்பை முடித்த ப்ரியாமணி முதன் முதலில் தெலுங்கில் 2012 இல் வெளியான எவரே அடங்காடு என்ற படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார்.
அதன் பின்னர் 2004 இல் தமிழ்ல் வெளியான கண்களால் கைது செய் என்ற படத்தில் நடித்தார். பின்னர் பிரபல இயக்குனர் பாலு மஹிந்திரா இவரைக் கண்டு 2005 அவர் இயக்கிய அது ஒரு கனா காலம் என்ற படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கவைத்தார்.
அந்த படத்தில் இவரது நடிப்பை கண்டு வியந்த இயக்குனர் அமீர் 2006 இல் கார்த்திக் அறிமுகமான பருத்தி வீரன் என்ற படத்தில் நடிக்க வைத்தார்.அந்த.படத்தின் மூலமே இவருக்கு தேசிய விருது கிடைத்ததொடு மேலும் பல விருத்துகளும் அள்ளித்தந்தது.
என்னதான் தேசிய விருது வாங்கினாலும் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வரவும் இல்லை, பெரிய ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பும் வரவில்லை.பருத்திவீரன் படத்திற்கு பிறகு
*நினைத்தாலே இனிக்கும்
*ராவணன்
*மலைக் கோட்டை
*சாரு லதா
*ஆறுமுகம்
போன்ற சுமாரான படங்களில் மட்டுமே நடித்திருந்தார். எனவே தெலுங்கு சினிமாவிற்கு இடம் பெயர்ந்த ப்ரியாமணி அங்கே முன்னணி நடிகர்களான நகர்ஜுனா ,வெங்கடேஷ் போன்ற நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வந்தார்.பின்னர் அதுவும் கை கொடுக்காததால் மலையாளம், கன்னடம் என்று பல மொழிகளில் மாறி மாறி நடித்து வந்தார்.
இவ்வளவு முயற்சிகள் எடுத்தும் சினிமாவில் நிலைக்க முடியாததால் இறுதியாக சின்னதிரை தொலைக்காட்சிகளில் நடுவராக.பங்கேற்க சென்று விட்டார்கடந்த ஆண்டு சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகிய ப்ரியாமணி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி முஸ்தபா ராஜ் என்ற முஸ்லீம் நபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் ஹிந்து வழிபட்டையை இன்னமும் கடைபிடித்து வருகிறார் ப்ரியாமணி.