தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் நடிகை ராசி கண்ணா. டெல்லியை பூர்விகமாக கொண்டவர் நடிகை ராசி கண்ணா. இவர் இந்தி சினிமாவில் தான் முதன் முதலில் அறிமுகமானர். அதாவது கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘மெட்ராஸ் கபே’ என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு வந்தார். இவர் ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
இவர் தமிழ் சினிமாவிற்கு புதிது என்றாலும் தெலுங்கில் பல படங்களில் நடித்து உள்ளார். நடிகை ராசி கண்ணா அவர்கள் இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவின் காதலியாக தமிழில் அறிமுகமானார்.இந்த படத்தை தொடர்ந்து இவர் ஜெயம் ரவியின் அடங்க மறு, விஷாலுடன் அயோக்கியா, விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானர்.
இவர் பெரும்பாலும் தெலுங்கு படங்களில் மட்டுமே தான் நடித்து வருகிறார். இங்கு நமக்கு நடிகை ஹன்சிகா எப்படியோ அதே போல் தெலுங்கில் ராசி கண்ணா. அதனால் நடிகை ராசி கண்ணா தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.சினிமா உலகில் நுழையும் போது நடிகை ராசி கண்ணா அவர்கள் பப்ளியாக கொஞ்சம் பப்லி லுக்கில் தான் இருந்தார்.
தற்போது தனது உடலை மிகவும் குறைத்து உள்ளார் நடிகை ராசி கண்ணா. இப்படி ஒரு நிலையில் கவர்ச்சியான உடையில் சில போட்டோ ஷூட்டை நடத்தியுள்ளார். தற்போது சுந்தர் சியின் அரண்மனை 3 யில் கமிட் ஆகி இருக்கிறார். சுந்தர் சி படங்கள் என்றாலே அதில் வரும் நாயகிகளின் கவர்ச்சிக்கு என்றும் பஞ்சம் இருந்தது இல்லை. எனவே, அரண்மனை 3 படத்திலும் நடிகைகளின் கவர்ச்சிக்கு சுந்தர் சி பஞ்சம் வைக்கமாட்டார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.