தமிழ் சினிமாவில் நைட்டீஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை ராதா கடந்த 1996ஆம் ஆண்டு ராஜசேகரன் நாயர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்குப் பின்னர் இவர்களுக்கு கார்த்திகா விக்னேஷ் துளசி என்று மூன்று பிள்ளைகள் பிறந்தார்கள் அதில் மூத்த மகளான கார்த்திகா தெலுங்கில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான ஜூஸ் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகை என்ற விருதையும் பெற்றார்.
அதன் பின்னர் தமிழில் ஜீவா நடிப்பில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான படத்தில் ஜீவாவின் ஜோடியாக நடித்திருந்தார் இந்த படத்திலும் இவரது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகைக்கான விருதினையும் ஜெயாடிவி விருதினையும் பெற்றார் அதன்பின்னர் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என்று பல்வேறு மொழிகளில் நடித்து வந்தார் கார்த்திகா கோ படத்திற்கு பின்னர் இவருக்கு தமிழில் சொல்லிக் கொள்ளும்படி படவாய்ப்புகள் அமையவில்லை.
இறுதியாக 2015 ஆம் ஆண்டு வெளியான புறம்போக்கு என்கிற பொதுவுடமை என்ற படத்தில் நடித்திருந்தார். அதன்பின்னர் இவருக்கு எந்த பட வாய்ப்பும் வரவில்லை. மேலும் இவர் அருண் விஜய் நடிப்பில் வாட்டில் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வந்தார் ஆனால் இந்த திரைப்படம் கடந்த 2012 ஆம் ஆண்டு பூஜை போடப்பட்டு தோடு சரி அதற்கு பின்னர் இந்த படம் என்னவானது என்பது தெரியவில்லை.
பட வாய்ப்புகள் இல்லாததால் தற்போது சினிமாவை விட்டு விலகி தனது தந்தை நடத்தும் ஓட்டல் தொழிலை கவனிக்க கார்த்திகா முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கேரளாவுல மூணு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களும், ஸ்கூல், சினிமா தியேட்டர், கல்யாண மண்டபம்னு நிறைய பிசினஸ் வேலைகளை ராதா குடும்பம் நடத்தி வருகிறது. கேரளாவுலயும் சென்னையிலயும் `ஏ.ஆர்.எஸ்’ங்கிற பெயர்ல ஸ்டூடியோ இருக்கிறது. மும்பையில பல ரெஸ்டாரன்ட்ஸ்நடத்தி வருகின்றனர். இதில் எல்லாம் பல ஆயிரம் பேர் வேலை செய்கிறார்கள்.