உடல் நலத்தில் கண்ணும் கருத்துமாக இருந்த ரகுல் ப்ரீத் சிங்கிற்கே கொரோனா தொற்று. அவரே பதிவிட்ட பதிவு.

0
630
rakul
- Advertisement -

இந்தியாவில் கடந்த நான்கு ஐந்து மாதங்களாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இன்னும் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் மக்கள் அனைவரும் கவலையில் உள்ளார்கள். சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை என யாரையும் பாரபட்சம் பார்க்காமல் கொரோனா தாக்கிக் கொண்டு வருகின்றது.

-விளம்பரம்-
rakul

இந்தியாவில் கடந்த நான்கு ஐந்து மாதங்களாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இன்னும் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் மக்கள் அனைவரும் கவலையில் உள்ளார்கள். சமீபத்தில் கூட வசந்த் அண்ட் கோ உரிமையாளர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின் உயிரிழந்தார்.

- Advertisement -

தே போல தமிழ் சினிமாவில் பல பிரபலங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்த்னர். இது ஒரு புறம் இருக்க போதாத குறைக்கு புதிய வைரஸ் ஒன்றும் பரவி வருகிறது. இப்படி ஒரு நிலையில் பிரபல நடிகையான ரகுல் ப்ரீத் சிங்கிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை தெரிவிக்க விரும்புகிறேன்.

என்னை நான் தனிமைப்படுத்திக்கொண்டு உள்ளேன். நான் நலமாக தான் இருக்கிறேன். நல்ல ஓய்விற்கு பின்னர் மீண்டும் படப்பிடிப்புகளில் கலந்துகொள்வேன். என்னை சந்தித்த அனைவரும் கொரோனா பரிசோதனை எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று பதிவிட்டுள்ளார். இதையடுத்து பலரும் ரகுல் ப்ரீத் சிங் குணமடைய வேண்டும் என்று அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement