வாழ்க்கையில் எல்லாத்தையும் இழந்து ‘உதவி கேட்டு ரஜினி வீட்டுக்கு சென்றேன்’ – ரமா பிரபா.

0
858
- Advertisement -

தென்னிந்திய சினிமாவில் பழம்பெரும் நடிகையாத தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் 1400க்கும் மேல் திரைப்படங்களை நடித்தவர் பிரபல நடிகை ரமா பிரபா. இவர் நடித்திருந்த படங்களில் கதாநாயகிகளுக்கு இணையாக கதாபாத்திரங்களில் நடித்து அவர்கள் அளவிற்கு சம்பளம் வாங்கியவர் என்று பெருமைக்குரியவர். இவர் பெரும்பாலும் தெலுங்கு சினிமாவில் பிரபல காமெடி நடிகரான ராஜா பாவுவுடன் இணைந்து அதிக திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மேலும் இவர் பட்டணத்தில் பூதம், வசந்த மாளிகை, சாந்தி நிலையம் போன்ற பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் கூட கலகலப்பு 2 பாகத்தில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

இவர் 80ஸ் மற்றும் 90ஸ் களில் நடிக்கும் போது ஒருகட்டத்தில் கதாநாயகிகளுக்கு இணையாக சொத்துக்களை சம்பாதித்த இவர் 1974ஆம் ஆண்டு சரத் பாபு என்பவருடன் சேர்ந்து ஒன்றாக வாழ்ந்து வந்தார். தமிழில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல் போன்றவர்களுடன் இணைந்து அண்ணாமலை, உதிரிப்பூக்கள், நெஞ்சத்து கிள்ளாதே, நிழல் நிஜமாகிறது, முத்து போன்ற பல திரைப்படங்களில் நடிகர் சரத் பாபு நடித்திருந்தார். இவர் தமிழ் சினிமாவில் நடித்து மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் நடித்திருக்கிறார்.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் சரத்பாபும் நடிகை ரமா பிரபாவும் கடந்த 1974 ஆம் ஆண்டிலிருந்து 1988 ஆம் ஆண்டுவரை இருவரும் நெருக்கமாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில் சரத் பாவு 1990ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் பிரபல வில்லன் நடிகரான எம்.என்.நம்பியாரின் மகளான சினேகாவை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நடிகர் சரத் பாபு தன்னை ஏமாற்றி சொத்துக்களை பறித்து கொண்டதாக நடிகை ராம பிரபா ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இது அப்போது சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மேலும் அதற்கு நடிகர் சரத்பாபுவும் தன்னுடைய கருத்தை தெளிவாக கூறியிருந்தார்.

இப்படியிருக்கும் போது சமீபத்தில் ஐதராபாத்தில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ராம பிரபா பேட்டியளித்திருந்தார். அந்த பேட்டியில் தான் சம்பார்த்த பணத்தை முழுவதும் ஒரு கட்டத்தில் இழந்து நடு ரோட்டிற்கு வந்த தன்னுடைய வாழ்க்கையை பற்றி கூறியிருந்தார். மேலும் அப்படி ஒரு நிலைமையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த தனக்கு உதவி செய்ததாக கூறியிருந்தார். ரஜினிகாந்தும் பல கஷ்டங்களை தன்னுடைய வாழ்க்கையில் கடந்து வந்தவர் தான். எவ்வளவு உயரத்திற்கும் சென்றாலும் அவருடைய அடக்கமும் உதவி கேட்டு வருபவர்களை வெறும் கையேடு அனுப்பும் பழக்கம் அவனுக்கு கிடையாது.

-விளம்பரம்-

அப்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் உதவி கேட்டு சென்றவர்களில் நானும் ஒருவர். மொத்த சொத்துக்களையும் இழந்து தெருவில் நின்ற எனக்கு கைச்செலவுக்கு பணம் கொடுத்தால் போதும் என்றுதான் சென்றிருந்தேன். அப்போது அதனை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. நான் அங்கு சென்று என்னுடைய நிலைமையை கூறியதும் ரஜினிகாந்த் மிகவும் வருத்தப்பட்டு அப்போதே 40 ஆயிரம் ரூபாயை கொடுத்தார். அப்போது 40ஆயிரம் ரூபாய் என்பது மிகப்பெரிய பணம். அந்த பணத்தின் மூலம் என்னுடைய எல்லா பிரச்னைகளையும் தீர்த்தேன். இந்த உதவி செய்த அவருக்கும் நான் என் வாழ்நாள் முழுவதும் கடன்பட்டிருப்பேன் என்று அதே பேட்டியில் கூறியிருந்தார் நடிகை ரமா பிரபா.

Advertisement