நடிகை ரம்பா, 90ஸ் கால கட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர். தமிழ் ,தெலுகு, கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக இருந்து வந்தவர். சமீபத்தில் மீண்டும் கற்பமாக இருக்கும் நேரத்தில் நடிகை ரம்பாவின் கணவர் இந்திரகுமார், ரம்பாபை மிகழ்ச்சியில் நிலைக்க வைத்த விடயம் ஒன்றை செய்துள்ளார்.
1975 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் பிறந்த நடிகை ரம்பா, 1992 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘ஆ ஓக்கடி அடுக்கு’ எனும் படத்தின் மூலம் திரை துறைக்கு அறிமுகமானர். பின்னர் 1993 ஆம் தமிழில் வெளியான ‘உழவன்’ என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரீட்சியமானவர். இதுவரை ரஜினி, விஜய்,அஜித் என்று தமிழின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துவிட்டார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு இந்திரகுமார் பத்மநாதன் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார் நடிகை ரம்பா. திருமணத்திற்கு பின்னர் 2011 ஆம் ஆண்டு லாண்யா என்ற மகளையும் 2015 ஆம் ஆண்டு ஷாஷா என்ற மற்றுமொரு மகளையும் ஈன்றுடுத்தார் நடிகை ரம்பா. திருமணமாகி இரண்டு குழந்தைகள் பெற்ற பின்னரும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்றார்.
ஏற்கனவே இரண்டு மகளை பெற்றுள்ள நடிகை ரம்பா, மீண்டும் கர்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. சில நாட்களுக்கு முன்னர் தான் கர்ப்பமாக இருப்பதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதிப்படுத்தினார் ரம்பா.இந்நிலையில் நடிகை ரம்பாவிற்கு அவரது கணவர் வளைகாப்பு விழாவை நடத்தி ரம்பாவை மகிழ்ச்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். சில வருடங்களாக பிரிந்து இருந்த இவர்கள் இருவரும் சமீபத்தில் தான் ஒன்று சேர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.