நடிகை ரம்யா பாண்டியன் திருமணத்திற்கு தயாராகி இருக்கும் தகவல் தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் முதன்முதலில் சினிமா திரை உலகில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த ‘டம்மி டப்பாசு’ என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமானார். பின் ராஜி முருகன் இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘ஜோக்கர்’ படத்தில் நடித்திருந்தார்.
இந்தப் படம் சமூக பிரச்சனைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். இந்தப் படத்தில் ரம்யா பாண்டியன் அவர்கள் கிராமத்து பெண்ணாக வளம் வந்து இருந்தார். அது மட்டும் இல்லாமல் நடிகை ரம்யா பாண்டியன் தன்னுடைய நடிப்புத் திறனால் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் இழுத்தார். அதற்குப் பின்னர் தான் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக ‘ஆண் தேவதை’ என்ற படத்தில் நடித்தார்.
ரம்யா பாண்டியன் குறித்து:
ஆனால், அந்தப் படம் பெரிய அளவில் வெற்றி தரவில்லை. அதற்குப் பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. பின் இவர் நடத்திய போட்டோ சூட் மூலம் இளசுகள் மத்தியில் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள். அதன்பின் தான் இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெறும் வாய்ப்பு கிடைத்தது.
ரம்யா பாண்டியன் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள்:
அதனைத் தொடர்ந்து, இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார். பின், ‘பிக் பாஸ் தமிழ் சீசன் 4’ நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவரது பெயர் கொஞ்சம் டேமேஜ் ஆனது. இருந்தாலும், அதையெல்லாம் சமாளித்து படங்களில் நடிக்க தொடங்கினார். குறிப்பாக, சூர்யா தயாரித்த ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாளும்’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.
ரம்யா பாண்டியன் திருமணம்:
அதன் பின்னர் சினிமாவில் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாததால் மீண்டும் பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்நிலையில் தற்போது நடிகை ரம்யா பாண்டியன் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளாராம். அதாவது நடிகர் ரம்யா பாண்டியன் கடந்த ஆண்டு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் ஆசிரமத்தில் யோகா பயிற்சி பெற்றார். அப்போது அங்கு பயிற்சியாளராக பணியாற்றி வரும் லோவல் தவானுக்கும் ரம்யா பாண்டியனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது.
திருமணம் எப்போது:
இதனால் இரு வீட்டார் சம்மதத்துடன் ரம்யா பாண்டியனின் திருமணம் வருகின்ற நவம்பர் மாதம் 8 ஆம் தேதி ரிஷிகேஷில் கங்கை நதி ஓரம் அமைந்துள்ள கோவிலில் நடைபெற உள்ளதாம். அங்குதான் லோவல் தவானை சந்தித்து காதல் வயப்பட்டதால் அங்கேயே இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்கள். இதை எடுத்து நவம்பர் 15ஆம் தேதி சென்னையில் இவர்களது திருமண வரவேற்பும் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.