Nccயில் Camp -ல் ஏற்பட்ட பழக்கம், இந்திய ராணுவத்தில் பணிபுரியும் ரஞ்சிதாவின் கணவரை பார்த்துளீர்களா ? இதோ புகைப்படம்.

0
1432
ranjitha
- Advertisement -

தன்னுடைய கணவர் குறித்து நித்தியானந்தா சிசியையும், நடிகையுமான ரஞ்சிதா அளித்திருந்த பேட்டி தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முக்கிய நாயகியாக வலம் வந்தவர் நடிகை ரஞ்சிதா. 90களில் முன்னணி நடிகையாக இருந்தவர். அப்போது அவருக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் இருந்தது. சொல்லாப்போனால் ஜெய்ஹிந்த் படத்தில் அர்ஜுடன் சேர்ந்து நடித்து மக்கள் மத்தியில் படு பேமஸ் ஆகி இருந்தார். அதுமட்டும் இல்லாமல் இவர் தமிழ், தெலுங்கு என பிற மொழி படங்களிலும் நடித்து இருந்தார். மேலும், ரஞ்சிதா ஆரம்ப காலத்தில் குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தாலும் பிற்காலத்தில் கவர்ச்சி கதாபாத்திரத்தில் வெளுத்து வாங்கி இருந்தார் அம்மணி.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-48.jpg

இப்படி சினிமாவில் கொடிகட்டி பறந்து கொண்டிருந்த ரஞ்சிதா திடீரென்று நடிப்பை நிறுத்திவிட்டு நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் சேர்ந்தார். அங்கு நித்யானந்தாவை தனது குருவாக எண்ணி பூஜித்தார். போலி சாமியார் நித்தியானந்தா பற்றி சொல்லவே வேண்டாம். அந்த அளவுக்கு சினிமா பிரபலங்களை விட சோசியல் மீடியாவில் சர்ச்சைகளில் சிக்கிய நாயகன். இவருக்கு இந்திய நாட்டில் மட்டும் இல்லாமல் உலகில் பல நாடுகளில் இவருக்கு ஆசிரமங்கள் இருக்கின்றது. உலக அளவில் இவருக்கு பக்தர்கள் இருக்கின்றார்கள். இருந்தாலும் நித்தியானந்தா மீதும் அவர் நடத்தி வந்த ஆசிரமம் மீதும் பல புகார்கள் எழுந்து இருக்கின்றது.

- Advertisement -

நித்தியானந்தா மீது வழக்கு:

அதிலும், குழந்தைகள் கடத்தல், பாலியல் துஸ்பிரயோகம், ஆசிரமத்திற்கு நன்கொடை வசூல் செய்ய வந்த குழந்தைகளை பாலியல் கொடுமைப் படுத்துதல் போன்ற பல குற்றச்சாட்டுகள் அவர் மீது எழுந்து இருக்கிறது. மத்திய அரசு நித்யானந்தாவை தீவிரமாக தேடியும் வருகிறது. இப்படி ஒரு சூழ்நிலையில் நித்யானந்தாவை தனது குருவாக எண்ணி பூஜித்து வருகிறார் ரஞ்சிதா. அதோடு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் போலி சாமியார் நித்தியானந்தா உடன் ரஞ்சிதா இருந்த படுக்கை அறைக் காட்சிகள் வெளியாகி மிகவும் மோசமாக விமர்சிக்கப்பட்டு இருந்தது. இது அனைவருக்கும் தெரிந்ததே.

நித்தியானந்தா – ரஞ்சிதா சர்ச்சை:

இதன் மூலம் இவர் சினிமாவில் வாங்கி வைத்த மொத்த பெயர், புகழ் எல்லாமே டேமேஜ் ஆகி இருந்தது என்றே சொல்லலாம். அதன் பின்னர் வேறு வழியின்றி ரஞ்சிதா அந்த ஆசிரமர்த்திலேயே செட்டில் ஆகி விட்டார். அதுமட்டுமில்லாமல் நித்தியானந்தாவும் அவரும் செய்த லீலைகள் எல்லாம் சோசியல் மீடியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவத்துடன் நித்யானந்தாவை விட்டு ரஞ்சிதா விலகி இருப்பார் என பலரும் கருதி இருந்தார்கள். ஆனால், இன்றுவரை நித்தியனந்த கூடவே நிழலாக இருக்கிறார் ரஞ்சிதா. நித்தியானந்தா சொல்லும் கைலாசத்தில் ரஞ்சிதாவும் உடனிருந்து கவனித்துக் கொள்கிறார்.

-விளம்பரம்-

தன் கணவர் குறித்து ரஞ்சிதா சொன்னது:

இந்த நிலையில் ரஞ்சிதா கடந்த ஆண்டு பிரபல நாளிதழுக்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருந்தது, என் கணவரை ஒரு Ncc கேம்ப்பில் தான் சந்தித்தேன். அவர் இந்திய ராணுவத்தில் வேலை செய்கிறார். எனக்கு அப்படியே மாறுபட்டவர் என் கணவர். அதிகமாக யாரிடமும் பேசமாட்டார். நான் வாழ்க்கையிலேயே பார்த்த ஒரே பேலன்ஸ்டு நபர் அவர் தான். என்ன டென்ஷன் ஆக இருந்தாலும் வெளியே காட்டிக்கொள்ள மாட்டார். நிறைய பேர் ஆபிசில் உள்ள பிரச்சினையை வீட்டில் காட்டுவார்கள், சண்டை போடுவார்கள். ஆனால், எனது கணவர் அப்படி செய்ய மாட்டார். 16 ஆண்டுகளாக அவருடன் குடும்பம் நடத்தி வரும் நிலையில் ஒரு நாள் கூட கோபப்பட்டு பார்த்ததே இல்லை. யாராவது என்னை பேசிவிட்டால் நான் கோபப்படுவேன். ஆனால், அவர் என்னை கூல் செய்வார்.

கோபம் வந்தால் ரஞ்சிதா செய்வது:

அவங்க பேசினது பிடிக்காவிட்டால் விட்டுவிட வேண்டும் என என்னை சமாதனம் செய்வார். நான் கோபப்பட்டாலும் புத்தகம் படித்தால் அந்த கோபத்தை மறந்து விடுவேன். புத்தக வாசிப்பு நம் மனநிலையை மாற்றிவிடும். வீட்டில் ஏதாவது சண்டை போட்டிருந்தால் கூட அதை இரண்டு நாள் கழித்து கேட்டால் எனக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது. உங்களுக்கு எது பிடிக்குதோ அதை செய்யுங்கள். அது உங்களை மாற்றும் என்று கூறியிருந்தார். இப்படி ரஞ்சிதா அளித்திருந்த பேட்டி தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும் ஏன் நித்யானந்தாவிடம் போய் சேர்ந்தீர்கள்? ஏன் உங்கள் கணவரை மறந்தீர்கள்? என நெட்டிசன்கள் கமெண்டுகளை குவித்து வருகிறார்கள்.

Advertisement