ஜெய்ஹிந்த் படத்தில் அர்ஜுடன் நடித்து பிரபலம் ஆனவர் நடிகை ரஞ்சிதா. பின்னர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் போலி சாமியார் நித்தியானந்தா உடன் ரஞ்சிதா இருந்த படுக்கையறை காட்சிகள் வெளியாகி மிகவும் மோசமாக விமர்சிக்கப்பட்டார் ரஞ்சிதா.
அதன்பின்னர் வேறு வழியின்றி அந்த ஆசிரமர்த்திலேயே செட்டில் ஆனார் ரஞ்சி. அங்கு ஒரு முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட்டு அதற்காக அவருக்கு ஒரு சொகுசு காரும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த காரில் தன் சீடர்களுடன் பெங்களூரில் உள்ள ஆசிரமத்திற்கு சென்றுள்ளார். செல்லும் வழியில் ரஞ்சிதாவின் கார் ஒருவர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தை ஏற்படுத்தியது மட்டுமில்லாமல் கீழே விழுந்த அந்த நபருக்கு என்ன ஆனது என்று கூட பார்க்காமல், காரை நிறுத்தாமல் சென்றுள்ளது ரஞ்சிதா கும்பல்.
இதனை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக கார் மற்றும் ரஞ்சிதாவுடன் சேர்த்து மொத்த கும்பலையும் பிடித்துள்ளது. இந்நிலையில் தங்கள் தலைவி ரஞ்சிதாவை பாதுகாக்க வேண்டி, அவரை அப்படியே அரண் போட்டு அழைத்து சென்றுள்ளனர் சீடர்கள். இதனை பார்த்த பொதுமக்கள் அவர்களை தாக்கவும் செய்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.