நடிகை ரீமா சென், 2002 ஆம் ஆண்டு வெளியான “பகவதி ” படத்தில் அறிமுகமானவர். சிம்பு நடித்த ‘வல்லவன் ‘ படத்திலும் கார்த்திக் நடித்த “ஆயிரத்தில் ஒருவன்” படத்திலும் இவரது நடிப்பு வெகுவாக பாராட்டபட்டது. இறுதியாக தமிழில் 2011 ஆம் ஆண்டு வெளியான ‘ராஜபாட்டை’ படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருந்தார்.
அதன் பின்னர் இவருக்கு தமிழ் பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. சினிமா வாழ்க்கையில் மவுசு குறைந்த பின்னர் தனது சொந்த வாழ்வில் கவனம் செலுத்திய நடிகை ரீமா சென் கடந்த 2012 ஆம் ஆண்டு சிவ் கரண் சிங் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.
திருமனமான அடுத்த ஆண்டே இந்த தம்பதியற்கு கடந்த 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி ஒரு அழகான ஆண் குழந்தையும் பிறந்தது. அந்த குழந்தைக்கு ருத்ரவீர் சிங் என்று பெயர் சூட்டினர். சமீபத்தில் நடிகை ரீமா சென் தனது கணவர் மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.
அந்த புகைப்படத்தில் நடிகை ரீமா சென் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் எடை கூடி வயதான பெண்ணை போல காட்சியளிக்கிறார். இதனை கண்ட ரசிகர்கள் நடிகை ரீமா சென்னா இது என்று மிகவும் ஷாக்காகியுள்ளனர்.இதோ அந்த புகைப்படம்.