முத்தக் காட்சிக்கு வற்புறுத்தியுள்ள இயக்குனர் – ஒரே வார்த்தையில் காப்பாற்றிய ஹீரோ. இதான் அந்த வார்த்தை.

0
3253
sai
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகைகளில் ஒருவராக சாய் பல்லவி திகழ்ந்து வருகிறார். இவர் திரைப்பட நடிகை மட்டும் இல்லாமல் ஒரு சிறந்த நடனக் கலைஞரும் ஆவார். நடிகை சாய் பல்லவி அவர்கள் திரைப்பட நடிகை மட்டுமில்லாமல் ஒரு மருத்துவரும் ஆவார். இவர் நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தின் காரணமாக தன்னுடைய மருத்துவத் தொழிலை விட்டு விட்டார். நடிகை சாய்பல்லவி அவர்கள் 2016 ஆம் ஆண்டு தன்னுடைய மருத்துவ பட்டத்தைப் பெற்றார். மேலும், இவருக்கு நடனத்தின் மீதும் அதிக ஆர்வம் உடையவர். அதனால் இவர் 2008 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நடன நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்.

-விளம்பரம்-

இதற்கு பிறகு இவர் பல மொழி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னுடைய நடன திறமையை வெளிப்படுத்தினார். இதற்கு பிறகு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. இவர் 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளி வந்து மாபெரும் பிளாக் பஸ்டர் படமாக அமைந்த ப்ரேமம் என்ற திரைப்படத்தில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் அதிகமாக கவரப்பட்டார். தற்போது வரை இவருடைய இந்த மலர் கதாபாத்திரம் ரசிகர்கள் விட்டு நீங்கவில்லை என்று சொல்லலாம். இந்த படத்தின் மூலம் தான் இவர் கதாநாயகியாக சினிமா உலகில் தோன்றினார்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டில் கலி என்ற படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து படம் நடித்தார். அதற்கு பிறகு தொடர்ந்து நடிகை சாய் பல்லவி அவர்கள் பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்து வருகிறார். நடிகை சாய் பல்லவி அவர்கள் தமிழில் நடிகர் சூர்யாவுடன் என் ஜி கே, தனுசுடன் மாரி 2 போன்ற படங்களில் நடித்து உள்ளார். மேலும், இவர் மாரி 2 படத்தில் ரவுடி பேபி என்ற பாடலுக்கு இவர் ஆடிய நடனம் இணையத்தில் படு வைரலாக பரவியது. சமீபத்தில் கூட இந்த பாடல் யூடுயூபில் 1பில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்தது.

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சாய் பல்லவி முத்தக் காட்சியில் இருந்து தப்பித்த காரணத்தை கூறியுள்ளார். “ஒரு படத்தின் இயக்குனர் முத்த காட்சியில் நடிக்கும்படி என்னை வற்புறுத்தினார். நான் அப்படி நடிக்க முடியாது என்று மறுத்தேன். ஆனாலும் தொடர்ந்து முத்தகாட்சியில் நடிக்குமாறு நிர்ப்பந்தம் கொடுத்தார்.  உடனே அந்த படத்தின் கதாநாயகன் இயக்குனரை பார்த்து இந்த பிரச்சினையை மீ டூ இயக்கத்துக்கு கொண்டு சென்றால் என்ன செய்வீர்கள்? என்று கேள்வி எழுப்பினார். அதன்பிறகு இயக்குனர் முத்த காட்சியில் நடிக்கும்படி என்னை கேட்கவில்லை. மீ டூ என்னை தப்பிக்க வைத்தது”

-விளம்பரம்-
Advertisement