அப்படி இல்லாததால் தான் என் வாழ்க்கை இப்படி ஆனது- எமோஷனலாக நடிகை சமந்தா சொன்ன விஷயம்

0
303
- Advertisement -

தன்னுடைய நிஜ வாழ்க்கை குறித்து சமந்தா அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் இந்தியாவின் பல மொழி படங்களில் நடித்தாலும், தமிழ் மற்றும் தெலுங்கில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

-விளம்பரம்-

இது ஒருபுறம் இருக்க, கடந்த இரண்டு வருடம் ஆகவே சமந்தா அவர்கள் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அவஸ்தை பட்டு இருந்த தகவல் அனைவரும் அறிந்ததே. இதனால் இவர் ஒரு வருடமாகவே சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து கொண்டார். சமீபத்தில் தான் இவர் பூரணம் குணமாகி வந்தார். தற்போது இவர் எல்லா மொழி படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் பாலிவுட் படத்தில் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

சமந்தா திரைப்பயணம்:

பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் சேர்ந்து Citadel: Honey Bunny என்ற வெப் தொடரில் சமந்தா நடித்திருக்கிறார். இந்த தொடர் கூடிய விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த தொடர் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகயிருக்கிறது. தற்போது இந்த வெப் தொடருக்கான ப்ரமோஷன் பணிகளில் சமந்தா மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் சமந்தா விடம், நீங்கள் இந்த சீரிஸில் ஸ்பை ஏஜென்டாக நடித்திருக்கிறீர்கள்.

சமந்தா அளித்த பேட்டி:

நிஜ வாழ்க்கையில் கூட ஸ்பையாக இருந்தீர்களா? என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு சமந்தா, நிஜ வாழ்க்கையில் கூட நான் அப்படி செய்ய வேண்டி இருந்தது. ஆனால் அப்படி, செய்யாமல் இருந்தது தான் நான் செய்த தவறு. நான் ஸ்பையாக இல்லாததால் தான் என்னுடைய வாழ்க்கை இப்படி ஆனது என்று ரொம்ப எமோஷனல் ஆக கூறியிருக்கிறார். இப்படி இவர் சொன்னதற்கு காரணம் நாக சைதன்யாவின் பிரிவை தான்
சொல்கிறாரா? வேறு எதாவது காரணம் இருக்குமா? என்று நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

-விளம்பரம்-

சமந்தா திருமணம்:

இதனிடையே நடிகை சமந்தா அவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் இவர் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார். இருவரும் தெனிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான ஜோடிகளாக வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தா- நாக சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக கடந்த 2021 ஆம் ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள்.

சமந்தா- நாக சைதன்யா பிரிவு:

மேலும், இவர்களின் பிரிவு ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இவர்களின் பிரிவு குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், கருத்துக்களும் எழுந்த வண்ணம் இருந்தது. ஆனால், இதுவரை இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை? ஏன் பிரிந்தார்கள்? என்று எந்த விவரமும் தெரியவில்லை. பிரிவிற்கு பின் சமந்தா தன் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வந்தார். தற்போது நாக சைதன்யாவுக்கு இரண்டாம் திருமணம் நடக்க இருக்கிறது.

Advertisement