பெரும் சர்ச்சையை கிளப்பிய தி பேமிலி மேன் வெப் தொடரில் நடிக்க காரணம் குறித்து சமந்தா பதிவிட்டுள்ளார். தி பேமிலி மேன் வெப் தொடரின் முதல் சீசன் கடந்த 2019 ஆம் ஆண்டு அமேசான் பிரைமில் வெளியாகி இருந்தது. ராஜ், டிகே ஆகியோர் இயக்கி இருந்த இந்த வெப் தொடரில் இதில் மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி, நீரஜ் மாதவ், சந்தீப் கிஷன் போன்ற ரசிகர்களுக்கு பரிட்சயமான நடிகர்கள் நடித்து இருந்தனர். இன்வெஸ்டிகேடிவ் க்ரைம் த்ரில்லராக இந்த தொடர் உருவாகி இருந்தது. மேலும், ரசிகர்கள் மத்தியில் இந்த வெப் தொடர் நல்ல வரவேற்பை பெற்றது.
முதல் சீசனின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டு ஆண்டுகள் கழித்து இந்த தொடரின் இரண்டாம் சீசன் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே முதல் சீசனில் நடித்த நடிகர்களுடன் இந்த இரண்டாம் தொடரில் சமந்தாவும் ஒரு முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த தொடரின் ட்ரைலர் வெளியாகி இருந்தது. அப்போது இந்த நிலையில் இந்த படத்தில் நடித்ததற்காக காரணத்தை கூறியுள்ளார் சமந்தா.
இது குறித்து பதிவிட்டுள்ள சமந்தா, உங்கள் அணைத்து விமர்சனங்களையும், கமெண்டுகளை பார்த்து மிக்க மகிழ்ச்சி அடைந்து இருக்கிறேன். ராஜி எப்போதும் எனக்கு ஸ்பெஷல் தான். இந்த வெப் சீரியஸ் நடிப்பதற்கு முன்பு ராஜன் என்னிடம், இலங்கைத் தமிழர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பதையும் ஈழப்போரில் பெண்களின் உண்மை கதைகளை உள்ளடக்கிய ஆவண புகைப்படங்களை எனக்கு கொடுத்தார். அந்த ஆவண புகைப்படத்தில் சில ஆயிரம் ஈழத் தமிழர்கள் மட்டும் படத்தில் இருப்பதை பார்த்தேன்.
ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த பிறகும் ஏன் இதனை யாரும் பெரிதாக பொருட்படுத்தவில்லை என்பதையும் உணர்ந்தேன். மேலும் இந்தப் போரினால் தங்களது வீடுகளையும், உடைமைகளையும் இழந்து பல்வேறுவிதமான நாடுகளில் வாழ்ந்து வரும் ஈழத்தமிழர்களின் அவலத்தையும் கண்டேன .அதனைப் பார்த்த பிறகுதான் இந்த கதாபாத்திரத்தை ஏற்றேன். இந்த கதாபாத்திரம் கற்பனையாக இருந்தாலும் ஈழப்போரில் தங்களது உயிரை விட்டவர்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.