தமிழில் கமலஹாசன் நடித்த “நாயகன்” படத்தில் கமலஹாசனுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். தற்போது பல படங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்து வருகிறார். மேலும், தற்போதுள்ள பெரும்பாலான பல முன்னனி ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்து வருகிறார்.
அம்மா கதாபாத்திரத்தில் சீரியஸான ரோலாக இறந்தாலும் சரி, காமெடியான அம்மாவாக இருந்தாலும் சரி இவர் நடிப்பில் பட்டையை கிளப்பிவிடுவார். பல இளைஞர்களும் இவரது நடிப்பை பார்த்து இப்படி ஒரு அம்மா தங்களுக்கு கிடைக்க கூடாதா என்று ஏங்கியுள்ளனர்.
ஆனால் அந்த ஏக்கம் இரு பெண்களுக்கு இல்லை, அது வேறு யாரும் இல்லை அவர்களது இரு மகள்கள் தான். நடிகை சரண்யா பிரபல நடிகர் பொன்வண்ணனை 1995 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு பிரியதர்ஷினி மற்றும் சாந்தி என்று இரு அழகான மகள்கள் பிறந்தனர்.
பொதுவாக எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் பங்குபெறாத இவர்களது மகள்கள், சமீபத்தில் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான “இரும்புத்திரை” படத்தின் சிறப்பு காட்சியை காண்பதற்காக தங்களது அம்மாவுடன் வந்திருந்தனர். இருவருமே படு மாடர்னாக திரைப்பட நடிகைகளை போலவே இருக்கின்றனர். இதோ அவர்களது புகைப்படம்.